மாநிலங்களில் பலமான எதிர்க்கட்சி பிஜேபியை எதிர்க்க தலைமை தாங்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

மாநிலங்களில் பலமான எதிர்க்கட்சி பிஜேபியை எதிர்க்க தலைமை தாங்க வேண்டும்

கொல்கத்தா, மே 6- அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது.

மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா, தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இனிவரும் மாதங்களில் இப்பணி வேகமெடுக்கும் என்று தெரிகிறது.

அதே சமயத்தில், தங்களை ஒடுக்க விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் சம்ஷெர்கஞ்ச் பகுதியில், கங்கை நீர் அரிப்பால் வீடுகளை இழந்தவர் களுக்கு பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி நடந்தது. அதில், அம் மாநில முதலமைச்சரும், திரிணா முல் காங்கிரஸ் தலைவருமான மம்தா கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:-

அடுத்த ஆண்டு நடக்கும் நாடா ளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜனதாவை எதிர்க்க வேண்டும். 

ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு வலுவாக உள்ள எதிர்க்கட்சி மட்டும் பா.ஜனதாவுடன் மோத வேண்டும். மற்ற எதிர்க்கட்சிகள், அந்த எதிர்க்கட்சியை ஆதரிக்க வேண்டும். ஓரணியாக போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்சி னையும் இல்லை.

சி.பி.அய்., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்பு களை பயன்படுத்தி, எதிர்க்கட்சி களை பா.ஜனதா துன்புறுத்தி வரு கிறது. யார் மீதாவது அந்த அமைப் புகளை ஏவி விடுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட நபர் மீது தவறு இல்லை, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று விசாரணை அதிகாரிகள் சொன்னாலும், வேறு ஏதாவது பொய் வழக்குப் போட்டு அசிங்கப்படுத்துமாறு பா.ஜனதா சொல்கிறது.

நாட்டை இதுபோன்று இழிவு படுத்தக்கூடாது. சி.பி.அய். மற்றும் அமலாக்கத்துறையால் ஓட்டு கிடைக்காது என்பதை பா.ஜனதா புரிந்து கொள்ள வேண்டும்.

தேசபக்தி கொண்டவரும், ஒவ் வொருவரையும் நேசிப்பவரும்தான் உண்மையான தலைவர். அனைத்து மதங்களையும் நேசிக்க வேண்டும்.

முர்சிதாபாத், மால்டா மாவட் டங்களில் கங்கை அரிப்பு கார ணமாக ஏராளமானோர் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர்.

அப்பிரச்சினையை தடுக்க ஒன்றிய அரசிடம் உதவி கேட் டோம். ஆனால் ஒன்றிய அரசு உதவவில்லை. வங்காளதேசத்துட னான இருதரப்பு நதிநீர் ஒப்பந்தம் மூலம் கிடைத்த பணத்தில் மேற்கு வங்காள அரசின் பங்கான ரூ.700 கோடியையும் தரவில்லை. இவ் வாறு அவர் பேசினார்

No comments:

Post a Comment