நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அடியோடு அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அடியோடு அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை

சென்னை,மே4-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அனுமதி யின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வருவதால், இதுபற்றி சென்னை மாநகராட்சியின் நிலைப்பாட்டையும், உண்மை நிலவரத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அனுமதியில்லாமல் வைக்கப் படும் விளம்பரப் பலகைகளைப் பொறுத்தமட்டில், நடவடிக் கைகள் ஆண்டில் பல்வேறு நகர்ப் புற சட்டங்களின் கீழ், விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி ("Tamil Nadu Urban Local Bodies Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 ñŸÁ‹ Chennai City Municipal Corporation Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003) விதி களின்படி, கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் விளம்பரப் பலகைகள் அமைப் பதற்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி வழங்கப் பட்டு வந்தது.

இந்நிலையில், ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, அனுமதியின்றி நிறுவப் பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றிட மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பிறகு அ.தி.மு.க. ஆட்சியிலேயே, 2018 ஆம் ஆண்டு அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் அமைக்க ஏதுவாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களுக்கு திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்களில் விளம்பரங்கள் செய்யும் "ஏகபோக சூழல்" அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

இப்படியொரு சட்டத் திருத் தத்தை எதிர்த்து, சில விளம்பர நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு (வழக்கு எண்.6913/2019) தொடுத்தன. அவ் வழக்கில், சட்டத் திருத்தத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்க அ.தி.மு.க. அரசுக்கு  கடந்த 11.03.2020 அன்று ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு. மேற்படி உயர்நீதிமன்ற ஆணையின் அடிப் படையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவ தும் விளம்பரப் பலகைகள் நிறுவு வதை முறைப்படுத்த, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 2022-இல் உரிய வழி முறைகள் வகுக்கப்பட்டு. இச்சட் டம் மற்றும் விதிகள் 13.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படை நோக்கம் அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அறவே அனுமதிக்க கூடாது என்பதுதான். இச்சட்டத்திற்கு முரணாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது மட்டுமின்றி, சட்டத்தை மீறி விளம்பரப் பல கைகள் வைக்கும் உரிமைதாரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்த அடிப்படையில், கடந்த 6 மாதங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 500-க்கும் மேற் பட்ட, தடை உத்தரவிற்கு உட் படாத விளம்பரப் பலகைகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட் டுள்ளன. ஆனால், இன்னும் ஆங் காங்கே சுமார் 697 விளம்பரப் பலகைகள் நீதிமன்ற தடையுத்தரவு களால் சென்னை மாநகராட்சியால் அகற்ற இயலாத சூழலில் உள்ளன என்றாலும், அவற்றையும் அகற் றிட பெருநகர சென்னை மாநக ராட்சி சார்பில் உரிய தீவிர நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. ஆகவே, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகை களை அடியோடு அகற்றுவதே தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின் நோக்கம் என்பதை மேற்காணும் விளக்கத் தின் மூலம் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். -இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment