பேரூராட்சித் தலைவருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 15ஆவது வார்டு தெருவிற்கு பெரியார் ஈ.வெ.ரா. தெரு என்று பெயர் சூட்டியதற்கும், மனிதன் இறந்த பிறகும் ஒட்டிக்கொண்டு வரும் ஜாதியை ஒழிக்கும் விதமாக ஜாதிக்கொரு தனி சுடுகாடு என்பதை மாற்றி அனைத்து ஜாதியினர்களுக்கும் பொது மின் மயானம் அமைக்க ஏற்பாடு செய்த பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்ரவர்த்தி அவர் களுக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன், தேனி நகர தலைவர் இரா.வெங்கடேசன், நகர செயலாளர் லோ.முத்துச்சாமி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் பேரூராட்சி துணைத் தலைவர் ப.மணிமாறன் நன்றி தெரிவித்தார்
No comments:
Post a Comment