போதும் - பெண்களுக்கு எதிரான வன்முறை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

போதும் - பெண்களுக்கு எதிரான வன்முறை!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் பரபரப்பாக பாஜகவினரால் பரப்பப்பட்டதில் முதன்மையானது - 2012ஆம் ஆண்டு நிர்பயா(புனைப்பெயர்) என்ற பெண் பாலியல் வன்கொடுமைக்காளானது தொடர்பானதைப் பிடித்துக்கொண்டு, அதையும் தேர்தல் விளம்பரமாக மாற்றியது பாஜகவின் சாதனை

2023இல் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகள் கடுமையான வெயிலில் தலைநகர் டில்லியில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து போராடுகின்றனர். இதுவரை மோடியோ அல்லது இதர பெண் பாஜக தலைவர்களோ வாய் திறக்கவில்லை..

இதில் பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் (பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தையை படிக்கவையுங்கள் ஸ்லோகன் வேறு).

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவரும் கைசர்கஞ்ச் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வன்கொடுமை  குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பெண்கள் மல்யுத்த வீராங்கனைகள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தனர். இந்நிலையில், டில்லி காவல்துறை  இரண்டு எப்அய்ஆர்களை பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்தது.

எனினும், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஒலிம்பிக் விருதாளர் சாக்சி மாலிக், “இது வெற்றிக்கான எங்கள் முதல் படி, ஆனால் எதிர்ப்புகள் தொடரும்” என்றார்.

2012 முதல் 2022 வரையிலான 10 ஆண்டு காலப்பகுதியில் எம்.பி.க்கு எதிராக - பாலியல் துன்புறுத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் விடுத்ததாக ஏழு மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் “தீவிரமானவை” என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.இப்போது ஏன் மீண்டும் போராட்டம்

பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள், கமிட்டியின் கண் துடைப்பு விசாரணை  பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடர்ந்து வீராங்கனைகள் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

 போராட்டங்களுக்கு மத்தியில்  மல்யுத்த அமைப்பு தேர்தல் அறிவிப்பு மற்றும் அதன் இதர பணிகள் குற்றவாளியான பிரிஜ்பூஜன் தலைமையில் அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியதில் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பிரிஜ் பூஷனுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் யார்?

பிரிஜ் பூஷண் மீது காவல் துறையில் புகார் அளித்த 7 பெண் மல்யுத்த வீரர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். இருப்பினும், ஜனவரி தொடக்கத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் உலகப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் ஆகிய மூன்று பேரும் போராட்டத்தின் முன்னணியில் உள்ளனர்.

முதல் சுற்றுப் போராட்டத்தின் போது, அன்ஷு மாலிக், சோனம் மாலிக், ரவி தஹியா மற்றும் தீபக் புனியா போன்றவர்கள் முன்னணியில் இருந்தனர்.

எனினும், மீண்டும் தொடங்கிய தற்போதைய சுற்றுப் போராட்டங்களில், கடந்த தசாப்தத்தில் இந்தியாவுக்காக பலர் பன்னாட்டு பதக்கங்களை வென்ற சாக்சி, வினேஷ் மற்றும் பஜ்ரங் மட்டுமே காணப்படுகின்றனர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் யார்?

மூத்த அரசியல்வாதியும் பா.ஜ.க. நிர்வாகியுமான பிரிஜ் பூஷண், 1991 மற்றும் 1999இல் கொண்டா மக்களவை தொகுதியிலும், 2004இல் பல்ராம்பூர் தொகுதியிலும், 2009, 2014 மற்றும் 2019இல் கைசர்கஞ்சிலும் வெற்றி பெற்று, ஆறு முறை எம்.பி.யாக இருந்தார்.

66 வயதான கொண்டாவைச் சேர்ந்த பிரிஜ் பூஷண் ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தொடர்புடையவர். இவர், ஆசிய மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் மற்றும் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் அரசாங்கத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

அரசியல் பலம் வாய்ந்தவராக அறியப்பட்ட பிரிஜ் பூஷண், உள்நாட்டில் விளையாட்டில் அதிக அளவு செல்வாக்கு செலுத்துகிறார்,

மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷண் மீது என்ன குற்றம் சாட்டியுள்ளனர்?

WFIஇன் செயல்பாட்டில் நிதி முறைகேடு மற்றும் தன்னிச்சையாக இருப்பதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது, பாலியல் துன்புறுத்தல் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புகார்தாரர்கள் 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, சில பாலியல் வன்கொடுமைகள் டில்லியில் உள்ள பிரிஜ் பூஷணின் அதிகாரப்பூர்வ பங்களாவிலும், இதர நகரங்களிலும்  வெளிநாட்டிலும் நடந்த போட்டிகளின் போது நடந்ததாகக் கூறியுள்ளார்.

இந்தப் புகார்தாரர்களில் ஒருவர் மைனர் ஆவார். இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு விளையாட்டு அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின்படி, மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் மீதும், மற்ற கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர், அவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கூடுதலாக, மல்யுத்த வீரர்கள் தங்கள் புகாரில் பிரிஜ் பூஷனை கிரிமினல், மிரட்டல் பேர் வழி என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கை என்ன?

பிரிஜ் பூஷண் மீது காவல்துறை புகாரின் அடிப்படையில் எப்அய்ஆர் பதிவு செய்ய வேண்டும். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மேலும், WFI தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றச்சாட்டுகள் தற்போது ஏன் வெளிவந்துள்ளன?

புகார் குறித்து கேள்விப்பட்டதும் வினேஷ், சாக்சி மற்றும் பஜ்ரங் ஆகியோர் பிரிஜ் பூஷன் மற்றும் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பயிற்சி யாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

தொடர்ந்து, “இளம் மல்யுத்த வீரர்களைப் பாதுகாக்க” பிரிஜ் பூஷனை நீக்கவும், அவரைக் கைது செய்யவும் அவர்கள் கோருவதாக வினேஷ் மீண்டும் வலியுறுத்தினார்.

போராட்டங்களுக்கு WFI எவ்வாறு பதிலளித்துள்ளது? 

பிரிஜ் பூஷன் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஜனவரியில், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் “தூக்கிலிடத் தயார்” என்று கூறியவர், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து கருத்து கேட்கும் அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

ஜனவரி மாதம், அரசாங்கம் மல்யுத்த வீரர்களை ஒரு மேற்பார்வைக் குழுவை உருவாக்கி அவர்களின் போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தியது, இது பிரிஜ் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கும் WFI-இன் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் பணித்தது.

குத்துச்சண்டை ஜாம்பவான் எம்.சி.மேரி கோம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, உண்மையை கண்டுபிடிக்க நான்கு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் முதல் வாரத்தில்தான் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதையடுத்து குழு கலைக்கப்பட்டது.

புதிய எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மே 7 அன்று திட்டமிடப்பட்ட WFI தேர்தல்களுக்கான தற்போதைய செயல்முறையை அரசாங்கம் செல்லாது என்று அறிவித்தது.

45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தும் ஒரு தற்காலிக குழுவை உருவாக்கவும், புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் வரை WFI-இன் அன்றாட விவகாரங்களை நிர்வகிக்கவும் IOA அறிவுறுத்தியது.

கண்காணிப்புக் குழுவின் முடிவுகள் என்ன?

அறிக்கை இன்னும் “ஆய்வு” செய்யப்பட்டுள்ளது, மேலும் பகிரங்கப் படுத்தப்படவில்லை. எனினும், விளையாட்டு அமைச்சகம் அறிக்கையின் பூர்வாங்க ஆய்வுக்குப் பிறகு சில தகவல்களைத் தெரிவித்தது.

அதில், பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2013 இன் கீழ் முறையாக அமைக்கப்பட்ட உள் புகார்கள் குழு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், கூட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரர்கள்  மற்றும் அமைப்பின் உறுப்பினர்களுக்கு  இடையே அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் ஆலோசனை தேவை என்றும் கூறப்பட்டது.

தொடர்ந்து, “கூட்டமைப்புக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இடையே திறந்தமனதுடன் பேச்சுவார்த்தை தேவை'' எனவும் கூறியிருந்தது.

No comments:

Post a Comment