திருச்சி, மே 30- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப் படிப்பு (D.Pharm) மாண வர்களுக்கான நேர்முகத் தேர்வு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறை யின் மூலம் நடைபெற்றது.
இதில் சென்னை சூப் பர்மெட் (SueprMed) மருந் தியல் நிறுவனம் கலந்து கொண்டு மாணவர்களை திறனறிச் சுற்று, தொழில் நுட்பச்சுற்று மற்றும் நேர்முகத் தேர்வு போன்ற மூன்று சுற்றுக்களாக தேர்வு செய்தது.
கலந்து கொண்ட 45 மாணவர்களில் 17 நபர் களுக்கான பணிநியமன ஆணையை சூப்பர்மெட் நிர்வாக அலுவலர் ஜனார் தனன் மற்றும் இரமேஷ் குழுவினர் பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந் தாமரையிடம் வழங்கி னர். அதனை பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனை வர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலையில் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை 19.5.2023 அன்று மாணவர்களிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மருந்தியல் பட்டயப் படிப்பினை நிறைவு செய்த மாதமே இம்மாண வர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் நேர் முகத்தேர்வில் கலந்து கொண்ட 45 நபர்களில் மீதமுள்ள 28 மாணவர் கள் தங்களது உயர்கல்வியினை (B.Pharm) தொட ராத பட்சத்தில் சூப்பர் மெட் நிறுவனத்தில் பணியினை தொடர எந்நேர மும் அணுகலாம் என்றும் பெரியார் மருந்தியல் கல் லூரியில் பயின்ற மாண வர்கள் முழு ஈடுபாட்டு டனும் பொறுப்புடனும் தமது பணியில் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்நிறுவனம் பெருமிதத் துடன் தெரிவித்துக் கொண்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் பணிய மர்த்தும் பிரிவின் இயக் குநர் பேரா. ச. ராஜேஷ், உதவி இயக்குநர் பேரா. எம்.கே.எம். அப்துல் லத் தீஃப் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment