கருநாடகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்! தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடியல்-இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

கருநாடகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்! தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடியல்-இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 21- கருநாடக மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக நேற்று (20.5.2023) சித்த ராமையா பதவி ஏற்றுக் கொண்டார். 

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதா னத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக கருநாடக முதலமைச்ச ராக சித்தராமையா பொறுப்பேற்றுக் கொண் டார். ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரும், 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கருநாடக முதலமைச்சர் மற்றும் துணை முத லமைச்சராக பொறுப் பேற்றுள்ள இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத் தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

மதச்சார் பின்மை யைப் போற்றும் இவ்விரு வரும் தங்கள் திறமை யான ஆட்சி நிர்வாகத் தால் கருநாடக மாநிலத் தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என உளமார நான் நம்புகிறேன்.

தெற்கில் ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த விடியலா னது இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக் கும் மணியோசைதான் பெங்களூரில் நடை பெற்ற பதவியேற்பு விழா! என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment