பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவன் சாதனை உயர் கல்விக்கு அரசு உதவி - முதலமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவன் சாதனை உயர் கல்விக்கு அரசு உதவி - முதலமைச்சர் தகவல்

சென்னை, மே 21- கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு கைகளை இழந்த சிறுவன்  தன்னம்பிக்கையுடன் போராடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த வர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி இணையர். இவர்களுக்கு க்ரித்தி வர்மா என்ற மகன் உள்ளார். மகன் க்ரித்தி வர்மா நான்கு வயது இருக்கும் பொழுது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண் டிருந்துள்ளார். 

அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டியவாறு மின்கம்பத்திலிருந்து சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப் பொழுது மின்சாரம் தாக்கி க்ரித்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

கஸ்தூரி, இரண்டு கைகள் இல்லாத தனது மகனுடன் அவரது சொந்த ஊரான ஜீனூர் கிராமத் திற்கு உள்ள தாய் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் 19.5.2023 அன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் பெற்று தன்னுடன் படித்த பள்ளி மாணவர்கள் 32 பேரில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

முதலமைச்சர் பதிவு

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்க ளுடைய கல்வியில் அடுத்த நிலைக் குச் செல்லும் மாணவச் செல்வங் கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

அவரது தாயாரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக் கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ் வுத்துறைக்கு உத்தரவிட் டுள்ளேன்.

நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப் புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment