நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரேசன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரேசன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு

சென்னை, ஏப். 30- தமிழ்நாடு சட்டசபையில் 8.4.2022 அன்று உணவுத்துறை அமைச்சர், "பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரசிக்கு பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து அரசுக்கு உணவுப்பொருள் வழங் கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில், 2018ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் கேழ்வரகு பயிரிடப் படும் பகுதியும், உற்பத்தியின் அள வும் உயர்ந்த வண்ணம் உள்ளன. 

மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு அதிகம் உற்பத்தி செய்யப் படுகிறது.

கொள்முதல்

இந்த திட்டத்தின்படி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள், அரி சிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

அதற்காக, நீலகிரி மாவட் டத்திற்கு 920 டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் என சேர்த்து மொத் தம் 1,360 டன் கேழ்வரகு தேவைப் படுகிறது.

நியாய விலைக் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர் களுக்கு விருப்பத்தின் பேரில் தற்போது கோதுமை வழங்கப் பட்டு வருகிறது. கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப் படுகிறது. கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு கேழ்வரகு எவ்வளவு தேவையோ, அதற்கேற்ப கோதுமை ஒதுக்கீட்டை சரி செய்துகொள்ள முடியும்.

அதுபற்றி இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும். கோதுமைக்கு பதிலாக கேழ்வரகை கொள்முதல் செய்வ தால் கூடுதல் செலவு எழ வாய்ப் பில்லை. ஏனென்றால், கோதுமை கிலோவுக்கு ரூ.2 என்றும், கேழ் வரகு கிலோவுக்கு ரூ.1 என்றும் இந்திய உணவு கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார்.

நிர்வாக ஒப்புதல்

அவரது கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதை ஏற்றுக்கொண்டு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நீலகிரி, தர்மபுரி மாவட் டங்களில் பரீட்சார்த்த முறையில், அரிசிக்கு பதிலாக மாதமொன் றுக்கு ஒரு குடும்பத்திற்கு அவர் களின் விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை வழங்கும் முன்னோடி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதலை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment