1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வை ஏப்.28-க்குள் முடிக்க அறிவுறுத்தல் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வை ஏப்.28-க்குள் முடிக்க அறிவுறுத்தல் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை,ஏப்.9- தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம் மாதம் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13இல் தொடங்கி ஏப்.3ஆம் தேதியு டன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14இல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் 6.4.2023 அன்று தொடங்கி இம்மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம்மாதம் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வை 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையும், 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர் களுக்கு, உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment