பார்வையாளர் குறிப்பேட்டில் தெள்ளிய கருத்து களைத் தெளிவாக எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் சா.பீட்டர்அல்ஃபோன்ஸ்,
“கையெழுத்து மணி மணியாக இருக்கிறதே” என்றார்.
அய்யாவின் பெயரிலேயே மணி உள்ளதல்லவா..? என்றோம்.
ஆசிரியர் எழுதி முடித்ததும்
“கை நடுக்கம் இல்லாமல் எழுதும் ஆற்றலை வியக்கிறோம்” என்றார் சா.பீட்டர்அல்ஃபோன்ஸ்.
ஆசிரியர் கி.வீரமணி உற்சாகமான புன்னகையோடு “கொள்கை நடுக்கம் வராவிடில் கை நடுக்கம் வராது” என்றார்.
கல்வெட்டில் எழுதவேண்டிய பதில் என்றோம்.
வாஞ்சையோடு கைகளைப் பற்றிக்கொண்டார் ஆசிரியர்.
அவர் நீடூழி வாழ்க..
- பேராசிரியர் ஹாஜா கனி,
பொதுச் செயலாளர்,
த.மு.மு.க.
No comments:
Post a Comment