பிரிட்டனில் ராகுல் காந்தி பேச்சு - அதானி விவகாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

பிரிட்டனில் ராகுல் காந்தி பேச்சு - அதானி விவகாரம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி - இரு நாட்களும் நாடாளுமன்றம் முடக்கம்

புதுடில்லி, மார்ச் 15- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தொழிலதி பர் அதானி விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப் பினர்கள் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (14.3.2023) முடங்கின. இதையடுத்து இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட் டத்தொடரின் 2ஆ-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், தொழிலதிபர் அதானி விவகாரம் குறித்து நாடா ளுமன்ற கூட்டுக் குழு விசார ணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனில் இந்திய நாடாளுமன்றம் குறித்து தவறாகப் பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஆளுங்கட்சியினரும் மோதிக் கொண்டதால் நேற்றுமுன்தினம், நாள் முழுவதும் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. 

இந்நிலையில் மக்களவை நேற்று காலை 11 மணிக்கு தொடங் கியதும் தொழிலதிபர் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத் தரவிடக் கோரி எதிர்க்கட்சி மக்க ளவை உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். அதேநேரம், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மக்களவை உறுப்பினர்க ளும், ஆளுங்கட்சி ஆதரவு மக்க ளவை உறுப்பினர்களும் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. மக்க ளவை தலைவர்  ஓம்பிர்லா பல முறை கேட்டுக்கொண்டும், உறுப் பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதையடுத்து அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் அவைகூடிய போதும் குழப்பம் நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு 2 மணிக்கு அவைகூடியபோதும் அமளி தொடர்ந்ததால் அவையை இன்று காலைவரை ஒத்திவைப்பதாக தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை எழுப்பி ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

ஆஸ்கர் விருதுக்காக பாராட்டு

முன்னதாக ஆர்ஆர்ஆர் படத் தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்காக படக்குழுவினருக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஒன்றிய அமைச்சரும், அவை முன் னவருமான பியூஷ் கோயல் பேசும் போது, ராகுல் காந்தி பெயரை குறிப்பிடாமல், வெளிநாட்டில் இந்திய தேசத்தை அவமதித்து விட்டார் என்றும், அவர்மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பேசினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

முன்னதாக அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தர விடத் தவறிய மத்திய அரசின் தோல்வி குறித்து விவாதிக்க வேண் டும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் பிரமோத் திவாரி, கே.சி.வேணுகோபால், குமார் கேட்கர், நீரஜ் டாங்கி, அகிலேஷ் பிரசாத் சிங், சையத் நசீர் ஹுசைன், அமீ யாஜ்நிக் ஆகியோர், மாநிலங் களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கரிடம் அறிக்கை கொடுத்திருந் தனர். ஆனால் இந்த அறிக்கையை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து, அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக் கம் எழுப்பினர். இதற்கு பதிலடி யாக, ராகுல் மன்னிப்பு கேட்க வேண் டும் என்று பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவையின் மய்யப்பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும், அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரைக்கும், அதன் பிறகும் அதே நிலை நீடித்ததால், இன்று காலை வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி மக்களவை உறுப்பினர்கள் அமளி யில் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவ டிக்கை தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருடன் சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத் தினார்.

முன்னதாக, அதானி விவகாரத் தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோருவது குறித்து நேற்று (14.3.2023) காலை காங்கி ரஸ், திமுக, மார்க்சிஸ்ட், அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா (உத்தவ் பிரிவு), ஆம் ஆத்மி, இந்திய கம்யூ னிஸ்ட், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மதிமுக, தேசிய மாநாட்டுக் கட்சி, கேரளா காங்கிரஸ் கட்சித் தலை வர்கள் கூடி ஆலோசனை நடத்தி னர். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பங்கேற்க வில்லை. இதற்கிடையே, நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத் தினார். 

No comments:

Post a Comment