இந்தியாவில் சென்னையில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் அமைச்சர் மனோ தங்கராஜ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

இந்தியாவில் சென்னையில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை, மார்ச் 10 இந்தியாவில்  சென்னையில் தான்  பெண்கள் பாது காப்பாக உள்ளனர் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் பின் தங்கியுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியை  மீட் டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசால்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது எனவும் அமைச்சர் மனோ தங்க ராஜ்  கூறியுள்ளார்.  

சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  ''இமாஜின்' என்ற தலைப்பில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொழில் முனைவோர் திட்டத்தில் தங்களது கண்டுபிடிப்புகளை அமைக்கப்பட்டு இருந்த 10 ஸ்டால்களில் (தற்காலிக கடை அமைப்பு) காட்சிப் படுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி  வைத்தார்.  பின்னர் தொழில் முனைவர் களுடன் கலந்துரையாடி ஸ்டால்களில் அமைக்கப் பட்டிருந்த அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் அமைச்சர் கேட் டறிந்தார்.  பின்னர் தொழில் முனைவோர் மாணவர்களுடன் கலந் துரையாடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் மேடை யில் பேசினார். 

 மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை தொழில் முனை வோர் மாநாடு நடைபெறுவதாகவும் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் இந்தியாவில் சென்னையில் தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் கடந்த 10 வருடங்களாக தொழில்நுட்ப வளர்ச் சியில் தமிழ்நாடு பின்தங்கி யுள்ளதாகவும் அதை மீட் டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் கடந்தாண்டு அய்டி துறையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதாகவும்,  விவசாயத்தில் அய்டி துறை மூலமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment