புதுடில்லி, மார்ச் 24- தலைநகர் டில்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
'மோடியை அகற்றுங்கள், நாட்டை காத்திடுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய அந்த சுவரொட்டிகளால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சுவரொட் டிகளை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். அந்த வகையில் சுவர்களிலும், மின் கம்பங்களிலும் ஒட்டப் பட்டிருந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுவரொட்டிகளை காவல்துறையினர் கிழித்து எறிந்தனர்.
அதேநேரம் ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளுடன் வந்த வாகனம் ஒன்றை, போஸ்டர்களுடன் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவ காரத்தில் நகரின் பல காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment