கோவை, மார்ச் 26- கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப் பகத்தில் ஜி.டி. நாயுடு அவர்களின் 130ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை யொட்டி மண்டல செய லாளர் ச.சிற்றரசு தலை மையில் மாநகர தலைவர் வே.தமிழ்முரசு முன்னிலையில் ஜி.டி. நாயுடுவின் புகைப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட் டது.
தொடர்ந்து ஜி.டி. நர்சரி பள்ளி குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வர்களுக்கு இனிப்புகளும் வழங்கி கொண்டாடப்பட்டது..
விழாவில் ஆசிரியர் பழனியப்பன், திமுக தோழர் நா. தமிழ்செல்வன் மற்றும் ஜி.டி. பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பேருந்துகளை இயக்கி அனைவரையும் அதிச யிக்கச் செய்தவர் வள்ளல் ஜி.டி. நாயுடு ஆவார்.
ஆங்கிலேய அரசு வருமான வரி என்ற பெய ரில் ஜி.டி..நாயுடுவின் சொத்தில் 90 விழுக்காடு தொகையை வரியாக கேட்டதால், 1938 ஆம் ஆண்டு தன்னுடைய யுனைட்டட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்திலிருந்த பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய பேருந்து களை தமிழ்நாடு அரசின் கோவை வட்டாரப் போக் குவரத்து கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்த வள்ளல் ஆவார்.
தமிழ்நாட்டின் அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு அவர்கள் தந்தை பெரியாரின் மிக நெருங் கிய நண்பராகவும், சிறந்த பகுத்தறிவாளராகவும் விளங்கியவர். மிக எளி மையான வாழ்க்கையை வாழ்ந்தவர், ஏராளமான கண்டுபிடிப்பை மக்களுக் காக இலவசமாக வழங் கிய அந்த அறிவியல் மாமேதையின் பிறந்த நாள் விழாவை பெரியார் படிப்பக காப்பாளர் அ.மு.ராஜா செய்திருந்தார்.
No comments:
Post a Comment