லக்னோ, மார்ச் 12 உத்தரப்பிரதேசத்தில் லாரியில் பசுக்கள் ஏற்றி வந்தவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து லக்னோ நகரின் பாரா காவல் நிலைய அதிகாரி டி.பி.சிங் கூறியதாவது:
பிரேம் சிங் (வயது 50) என்பவர் தனது லாரியில் 13 பசுக்களுடன் மெயின்புரி நோக்கிச் சென்றார். லக்னோ அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுடப்பட்டார். இதையடுத்து பிரேம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் 307 ஆவது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளோம். பிரேம் சிங் சுடப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment