வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் இருந்து காங்கிரசார் வாகனப் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் இருந்து காங்கிரசார் வாகனப் பேரணி

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்

ஈரோடு,  மார்ச் 29- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து நடந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா நினைவாக, ஈரோட்டுக்கும், தந்தை பெரியாரின் நினைவில்லத்துக்கும் வந்து தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி விட்டு, வைக்கம் நிகழ்வுகளை நடத்துவது என கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, கேரள காங்கிரஸ் குழுவினர் நேற்று (28.3.2023) ஈரோடு வந்தனர்.

நாளை (மார்ச் 30) வைக்கத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் இருந்து வாகனப்பேரணி நேற்று புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் முத்துசாமி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மோகன்குமாரமங்கலம், கேரள மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், கவுன்சிலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment