பொன்னேரியில் எழுச்சியுடன் நடைபெற்ற மகளிர் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

பொன்னேரியில் எழுச்சியுடன் நடைபெற்ற மகளிர் கருத்தரங்கம்

பொன்னேரி, மார்ச் 25- திராவிடர் கழக பொன்னேரி நகர செயலா ளர் மு.சுதாகர், மாவட்ட திரா விட மகளிர் பாசறை செயலா ளர் மா. இளையராணி இணை யரின் அன்பு மகன் பெரியார் பிஞ்சு சு.இ.தமிழ்ச்செம்மலின்  முதலாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 14.3.2023 அன்று மாலை மகளிர் கருத்தரங்கம் பொன்னேரி ஆதித்தனார் அரங்கத்தில் மிகவும் எழுச்சி யுடன் நடைபெற்றது.  

பொதுக்குழு உறுப்பினரும் மாவட்ட மகளிரணி தலைவரு மான மு.ராணி  தலைமை 

யில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட திராவிடர் கழக  மக ளிரணி செயலாளர் ச. நதியா வரவேற்புரையாற்றினார். நகர மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பா ளர்கள் சு.துர்கா,  இரா.வேணி கா.சுபலட்சுமி, எ.மீரா கத்தீஜா ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் பொன்னேரி செல்வி இணைப்புரையாற்றி னார்.

"பெண்ணுக்கு என்ன வேண்டும்?"  என்கிற கருத்தரங்க தலைப்பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி  அவர் களும். "வீட்டில் பாதி நாட்டில் பாதி" என்கிற தலைப்பில் திரா விடர் கழக  மகளிர் பாசறையின் மாநில செயலாளர் வழக்குரை ஞர் பா.மணியம்மை அவர்க ளும்  "விண்ணில் பாதி மண் ணில் பாதி" என்கிற தலைப்பில் திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனி அவர் களும் உரையாற்றினார்கள்.

மாவட்ட திராவிட மகளிர் பாசறை செயலாளர் மா.இளை யராணி  நன்றியுரையாற்றினார்.

பிறந்தநாள் விழாவில் மகளிர் கருத்தரங்கம் என்பது பொன்னேரி பகுதியில் முதல் முறை என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை மிகுந்த மகிழ்ச்சி யுடன் கண்டு களித்ததோடு மட்டும் அல்லாமல், மீண்டும் இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்துமாறும் கூறி ஊக்க மளித்து சென்றனர். 

இது தான் இந்த பிறந்தநாள் விழாவின் சிறப்பாக கருதப்பட்டது. 

கழக அமைப்புச் செயலா ளர் வி.பன்னீர் செல்வம்,  பொன்னேரி நகர மன்ற தலை வர் தி.மு.க மருத்துவர் வி.பரி மளம் விஸ்வநாதன், மருத்துவர் அனுரத்னா, பொன்னேரி அரசு மருத்துவமனை மருத் துவர் ஜான்சிராணி, கும்மி டிப்பூண்டி மாவட்ட தலைவர்  புழல் த.ஆனந்தன், கும்மிடிப் பூண்டி மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கர், கும்மிடிப்பூண்டி மேனாள் மாவட்ட தலைவர் செ.உதயகுமார், கும்மிடிப் பூண்டி மேனாள் மாவட்ட செயலாளர் இரா.இரமேசு, கும்மிடிப்பூண்டி மாவட்ட துணைத் தலைவர் க.சு இராஜசேகர், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலை வர் சோழவரம் மா.சக்கரவர்த்தி, கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கார்த்திகயன், சகும்மிடிப் பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ச.க இரணியன் திருவள்ளூர் மாவட்ட தொழி லாளர் அணி செயலாளர் இரா.அசோக்குமார், மீஞ்சூர் ஒன்றிய தலைவர் தி.க மு.க. தமிழ்ச்செல்வன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் தி.ககெ.முருகன், பொன்னேரி நகர தலைவர் தி.கவே.அருள் மற் றும் ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள் பல்வேறு இயக்கங்களை சார்ந்த தோழர் கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment