செங்கல்பட்டு மாவட்டஇளைஞர்களுக்காக வரும் 18-ஆம் தேதி மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

செங்கல்பட்டு மாவட்டஇளைஞர்களுக்காக வரும் 18-ஆம் தேதி மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம்

 செங்கல்பட்டு, மார்ச் 16  செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்தவேலையில்லா இளைஞர்களுக்காக மெகா வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது. வரும் மார்ச் 18-ஆம் தேதிநடைபெறும் இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்று   பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இந்த ஆண்டுக்கான மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) வித்யாசாகர் மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. இதனை செங் கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு பி.இ., அய்டிஅய் மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 18 முதல் 40 வயது வரை: இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்கலாம். இவர்கள் தங்களுடைய கல்வி சான் றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 18-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரைமுகாமில் கலந்துகொண்டு உரியவேலையை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ள வர்கள் மற்றும் வேலைதேடும் இளை ஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in https://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுவதன் மூலம் தொடர்புடைய நபர் களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்துசெய்யப்பட மாட்டாது எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment