தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை,மார்ச்15- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழ்நாடு மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 12ஆம் தேதி இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 ñŸÁ‹ IND-TN-06-MM-7818) சிறை பிடிக்கப்பட்டனர்.

இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த சிலர் / இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது சம்பவம் இது.

மீனவர்கள் வாழ்வாதாரத் திற்காக மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். அடிக் கடி நிகழும் இதுபோன்ற நிகழ்வு கள் ஏழை மீனவர்களின் வாழ்வா தாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக் குகின்றன.

இந்த விவகாரத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கெனவே கொண்டு  சென்றேன்.  வெளியுறவுத் அமைச்சரும் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத் திற்கு கொண்டு சென்றார். இருப் பினும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.

நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற நிகழ் வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க வும் நீங்கள்(பிரதமர்) உடனடியாக இதில் தலையிடவேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர் களையும், 102 மீன்பிடி படகுகளை யும் விரைவில் விடுவிக்க தேவை யான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன.

 இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்க ளையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment