Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
விவசாயிகளுக்கு ரூ.113 கோடி உதவித் தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
March 03, 2023 • Viduthalai

சென்னை, மார்ச் 3 தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் நாட்டில் 2023 ஜனவரி மாதம் கடைசி வாரம் மற்றும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பெய்த பருவமழையால் பாதிக்கப்பட்டு, 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற் பட்டுள்ள நெல் பயிருக்கு உயர்த்தப் பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப். 6ஆ-ம் தேதி அறிவித்தார். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அரியலூர், மயி லாடுதுறை, நாகப்பட்டினம், புதுக் கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில், வருவாய், வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, பயிர் சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர். இதில், 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் இதரபயிர்கள், 33 சதவீ தத்துக்கும் மேல் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலனைக் கருத்தில்கொண்டு, 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில், 93,874 எக்டேர் பரப்பிலான பயிர்களுக்கு, உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து ரூ.112.72 கோடி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிவாரண உதவித் தொகையை, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறி வறுத்தியுள்ளார். இதையடுத்து, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு, உட னடியாக நிவாரணம் வழங்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!
February 16, 2022 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn