Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்துக்கு அவமதிப்பு - தமிழ்நாடு மாணவர்கள்மீது தாக்குதல்
February 21, 2023 • Viduthalai

முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்

புதுடில்லி, பிப்.21 டில்லி ஜே.என்.யூவில் மாணவ அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு மாணவர் மீது ஏ.பி.வி.பி.யினர் தாக் குதல் நடத்தியிருந்தனர். இதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழ்நாடு அரசியல் தலை வர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மும்பை அய் .அய். டி.யில் ஜாதிய வன்மத்தால் தன்னுயிர் மாய்த்துக் கொண்ட தாழ்த்தப்பட்ட சமு கத்தைச் சேர்ந்த மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு, இடது சாரி மாணவர் அமைப்பினர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தில்  ஊர்வலம் சென்றனர். அய்.அய்.டி. வளாகங்களில் தாழ்த்தப் பட்ட, இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் அய்யத்திற் கிடமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவதன் பின்னணியில் உள்ள ஜாதி, மத ஒடுக்குமுறை’ என்பது குறித்த ஆவணப்படமொன்று, அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிடப்பட்டது. அதில் இடது சாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி களின் மாணவர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த மாண வர்கள் என தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜே.என்.யூ-வில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.

 இந்த நிலையில் சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது போலி யான காரணத்தைக் கூறி ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினராக ஏ.பி.வி.பி. அமைப்பினர், ஆவணப் படம் திரையிடப்படவிருந்த அரங் கிற்கு சென்று அங்கிருந்த மற்ற மாண வர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலின் போது அவர்கள் அங் கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் படங் களை அடித்து சேதப்படுத்தினர்.

இந்தத் தாக்குதலில், தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் உள் பட பலர் படுகாயமடைந்தனர். தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர் நாசருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்களை ஆம்பு லன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்தவர்கள் முயன்ற நிலையில், அவர்களை மறித்து ஏ.பி.வி.பி.யினர் தடுத்ததாக வும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக டில்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் ஏபிவிபியினர் மீது தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அரசியல் தலைவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர்..  

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கை யில்,  “பல்கலைக் கழகங்கள் என்பது கற் பதற்கு மட் டுமல்ல; விவா தங்கள், கலந்தாலோசனைகள் ஆகிய வற்றுக்கும்தான். அப்படியிருக்க, ஜேஎன்யு வில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத் தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப் படங்களை சேதப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  குற்ற வாளிகள்மீது பல்கலைக்கழக நிர் வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.  ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய பாஜக ஆட் சியை விமர்சித்ததற்காகவும், தங் களது உரிமைகளுக்காகப் போராடியதற் காகவும் மாணவர்கள் மீது கட்ட விழ்த்து விடப்பட்ட வன்முறையை, பார்வையார்களாக பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்துள்ளன ஜேஎன்யு நிர்வாகமும்,  டில்லி காவல்துறையும். குற்ற வாளிகள்மீது நடவடிக்கை எடுக் கவும், தமிழ்நாடு மாணவர்களை பாதுகாக்கவும் கல் லூரி துணை வேந்தரை கேட்டுக்கொள் கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ   

“பிப்ரவரி- 19ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ் நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’ என்ற பெயரில் பெரியாரின் கருத் துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட் களையும் சேதப் படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாண வர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பொதுஉடைமைத் தலைவர்களை இழிவு படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூர வன் முறையை ஏவி, தந்தை பெரியார்   உருவப்படத்தையும் சேதப்படுத்திய ஏ.பி.வி.பி. கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். காயம் அடைந்த மாணவர்களுக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறி யுள்ளார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

“பெரியார்,மார்க்ஸ் படங்கள் அவமதிப்பு! தமிழ்நாட்டு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்! ஏபிவிபி குண்டர்களின் மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! வன்முறையில் ஈடு பட்ட ஏபிவிபி மாணவர்கள் மீது சட் டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியு றுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

“டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர் நாசர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை பெரியார் படம் உள்ளிட்டு சேத மாக்கப்பட்டுள்ளது'' என்று தன் னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn