'சமூகநீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தை நன்னிலத்தில் எழுச்சியுடன் நடத்துவோம்: கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

'சமூகநீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தை நன்னிலத்தில் எழுச்சியுடன் நடத்துவோம்: கலந்துரையாடலில் தீர்மானம்

நன்னிலம், பிப்.11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் எதிர்வரும் 05-.03.2023 அன்று நடைபெற இருப்பதால் அதன் தொடர்பாக திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 31-.01.2023 அன்று மாலை 6.30 மணி அளவில் நன்னிலம் போஸ் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் வீ.மோகன் தலைமையேற்று உரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆசிரியர் வருகை குறித் தும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மண்டல கழக தலைவர் கி.முருகையன், மண்டல செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. தமிழர் தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை (3.2.2023 முதல் 10-.3.-2023) தொடர் பயண பொது கூட்டத்தை 5.3.-2023 அன்று நன்னிலத்தில் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது

2. பரப்புரை பயண பொதுக்கூட்டத்தை விளக்கி சுவர் எழுத்து விளம்பரங்கள், உள்ளூர் தொலைக்காட்சி விளம்பரம், பிளக்ஸ் விளம்பரம், ஆட்டோ விளம்பரம், கடைவீதி வசூல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் கழத்தோழர்கள் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்படுகிறது.

3. பரப்புரை பயண பொதுக் கூட் டத்தை நன்னிலத்தில் நடத்துவதற்கு வாய்ப்பு அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் நன்னிலம் வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சியான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

சுயமரியாதைச் சுடரொளிகள் நாகை குஞ்சுபாபு, திருப்புகளூர் பெரியார்முரசு, அச்சுதமங்கலம் கணே சன், திருவிடைச்சேரி தங்கவேல் , வில்லியனூர் பட்டுஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகைமாவட்ட செயலார் ஜெ.புபேஸ் குப்தா, மாநில விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் வீரையன்,மாவட்ட ப.க செயலாளர் அசோக்ராஜ்,மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, நாகை மாவட்ட இளைஞர் அணி தலைவர் இராஜ்மோகன், நாகை மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இராச.முருகையன் திருவாரூர்ஒன்றிய தலைவர் கவுதமன்,மன்னை மாவட்ட துணைச்செயலாளர் புஸ்பநாதன், நன்னிலம் ஒன்றிய பக தலைவர் கரிகாலன், நன்னிலம் ஒன்றிய தலைவர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஒன்றிய அமைப்பாளர் பொய்யாமொழி, திருவாரூர் ஒன்றிய துணைத் தலைவர் இராஜேந்தின், மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ் வதி, திருவாரூர் நகர அமைப்பாளர் சிவராமன், பழனிச்சாமி, திருத்துறை பூண்டி ஒன்றியத் தலைவர் சித்தார்த்தன், ஆனைக்குப்பம் இராமசாமி, நன்னிலம் ஓவியர் சங்கர், வழக்குரைஞர் சரவணன், நாகை ரவி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்

இறுதியாக நன்னிலம் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment