'சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

'சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

சென்னை, பிப். 4- 'சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்து உள்ளார். தற்போது மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு பேருந் துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை 'சென்னை பஸ்' செயலி மூலம் கைப்பேசியில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனை தொடர்ந்து தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு 'சென்னை பஸ்' செயலி மூலம் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் குறிப்பிட்ட இடத் திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், பேருந்து தடம் குறித்த தேடுதல் பட்டனை கிளிக் செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்து களின் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேவையான தடத் தினை தேர்ந்தெடுத்து கிளிக் செய் வதன் மூலம் தற்போது அந்த தடத் தில் வருகின்ற பேருந்துகளின் விவ ரங்களை அறிந்து கொள்ளலாம். 

பேருந்தின் நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு மூலமாக பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இருப்பிட விவரத்தினை பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பும் வசதியும் உள் ளது.

பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துகளை பதிவு செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. மேலும், இச்செயலி மூலம் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற் றும் கல்லூரி மாணவ-மாணவிக ளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத் தக்கது. இச்செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அவர்களது முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் வருகிறது என்ற விவரத் தையும் அறியலாம்.

மேலும், அரசு விரைவு போக்கு வரத்து கழக பணி மனை மற்றும் பேருந்து நிலையங் களில் பேருந்து களின் வருகையினை முன் கூட் டியே அறிந்து அதற்கேற்ப புறப் பாட்டினை திட்டமிட இச்செயலி பயன்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment