’பா.ஜ.க. பிரச்சினையில் அ.தி.மு.க. எச்சரிக்கையுடன் உள்ளதாம்’ - கூறுகிறார் மேனாள் அமைச்சர் பொன்னையன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

’பா.ஜ.க. பிரச்சினையில் அ.தி.மு.க. எச்சரிக்கையுடன் உள்ளதாம்’ - கூறுகிறார் மேனாள் அமைச்சர் பொன்னையன்

சென்னை, பிப். 4- பாஜக விவகாரத்தில் எச்சரிக்கை யுடன் இருப்பதாகவும், வடமாநிலங்களில் பாஜக தங்களது நட்பு கட்சிக ளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது, எப்படி எதிர்த்தது என்று அனை வருக்கும் தெரியும் என் றும் அதிமுக மேனாள் அமைச்சர் பொன்னை யன் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற் கரையில் உள்ள அண்ணா நினைவிடத் தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி உடன் அதிமுக மேனாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், அண்ணா நினைவி த்தில் மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த அதிமுக மேனாள் அமைச்சர் பொன்னை யன், “தேர்தல் ஆணையம் தொடக்கத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் கைவிட்டுவிட்டு, தற் போது நீதிமன்றத்தை கைகாட்டுவதை ஏற்றுகொள்ள முடியாது. சட்டத்தில் இருந்து தேர் தல் ஆணையம் விலகி உள்ளது. இருப்பினும் நீதிமன்றம் இதனை சரி செய்யும். 

எம்.ஜி.ஆர், ஜெயலலி தாவிற்கு பிறகு இரட்டை இல்லை சின்னம் எடப் பாடி பழனிச்சாமிக்கு தான் சொந்தம். இதனை மக்கள் ஏற்றுக் கொண் டனர். பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சா மிக்கு ஆதரவாக உள்ள னர்.

எனவே இரட்டை இலை சின்னம் எடப் பாடி பழனிச்சாமிக்கு தான் கிடைக்கும்.பாஜக, வட இந்தியாவில் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி எல்லாம் கவிழ்த் தன. எப்படி எதிர்த்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக விவகா ரத்தில் நாங்கள் எச்சரிக் கையாக இருக்கிறோம். மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஈரோடு கிழக்கு தேர்தலை பொறுத்த வரை எடப்பாடி பழனிச் சாமி தலைமையில் போட்டியிடுவோம். மக்கள் எங்கள் பக்கம் தான் நிற்கிறார்கள். அது போல பாஜகவும் எங்கள் பக்கம் நிற்க விரும்பலாம். திமுக தவிர மற்ற எந்த கட்சிகள் வேண்டும் என்றாலும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment