“முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 13, 2023

“முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்

புதுடில்லி,பிப்.13- 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ரவிக்குமார் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வமான உரையில், இந்த பட்ஜெட் எப்படி பெரும்பான்மைவாதத்தின் பொருளாதார அறிக்கையாக இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டினார். 

“இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை சமூகத்தினருக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாகுபாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் ; அவர்களுக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.   எனது விழுப்புரம் தொகுதியில் உள்ள ரயில்வே பள்ளியை கேந்திரிய வித்யாலயா பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.   ஏகலைவா மாதிரி பள்ளிகள் போன்று எஸ்.சி. பிரிவி னருக்கு சிறப்புப் பள்ளிகள் அமைக்க வேண்டும்.   எஸ்சிஎஸ்பி மற்றும் டிஎஸ் பியை (SCSP/TSP) முறையாக செயல் படுத்த மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழிக் காக நான்கு பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது.  2023 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி மறைந்த தமிழ்நாடு முத லமைச்சரும், சிறந்த தமிழறிஞருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஆரம்பமாகிறது.  அவரை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

No comments:

Post a Comment