அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு

சியாட்டில், பிப்.22- அமெரிக்காவிலுள்ள சியாட்டில் மாநகர் மன்றக் கூட்டத்தில் ஜாதிக்கு தடை விதிப்பதற்கான தீர்மானத் தின்மீதான வாக் கெடுப்பில் ஆறுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வாக்களிக்கப்பட்டு பெரும்பான்மையானவர்கள் ஜாதிக்கு தடைவிதிக்க ஒப்புதல் அளித் துள்ளனர். அதன்படி, சியாட்டில் மாநகரில் பாகு பாடுகளைக் கொண்டுள்ள ஜாதி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலேயே முதல்முறையாக சியாட்டில் மாநகரில் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்தின்படி குறிப்பாக ஜாதியின் பெயரால் உள்ள பாகுபாடுகளுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.

மனிதர்களை பிளவுபடுத்துகின்ற ஜாதி அமைப்புமுறை வருணாசிரம, சனாதன, இந்து மதத்தின் பெயரால் மனிதர்கள் சமத்துவத்துடன் நடத்தப்படாமல், பிறப்பு முதல் இறந்த பின் னரும் ஜாதி இழிவு தொடர்ந்துகொண்டிருக் கிறது. இந்த ஜாதி பாகுபாடுகள் தெற் காசியா விலிருந்து அமெரிக்க அய்க்கிய நாடுகள், அய்ரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடு களுக்கு புலம் பெயர்ந்தவர் களிடையேயும் நிலவி வருகிறது. 

கண்டம் விட்டு கண்டம் தாண்டியும், பல்வேறு நாடுகளைக் கடந்து பிழைப்புக்காக சென்றபோதிலும், ஜாதி பாகுபாடுகளால், ஜாதி இழிவுகள் மதத்தின் பெயரால் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவலநிலை இந்த இந்து மதம், வருணாசிரமம், சனாதனத்தின் கொடு வாள் சமத்துவத்தைப் பிளந்துகொண்டுவரு கிறது.

அதற்கொரு முடிவு கட்டும்வகையில், அமெரிக்க நாட்டில் முதல் முறையாக சியாட்டில் மாநகர் மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்பொழுது ஜாதிக் கொடுமைக்கு சட்டப்படி தடை போடப்பட்டுள்ளது.

மனித உரிமையில் மனித நேயத்தில் அக் கறை கொண்டோர் என பலதரப்பினரும் இச் சட்டத்தை பெரிதும் வரவேற்று மகிழ்கிறார்கள்.

ஜாதிய பாகுபாடு என்பது மனித உரிமை களுக்கு எதிரான தாக உள்ளது. ஏற்கெனவே உள்ள மனித உரிமைகள் சட்டத் தின்படி ஜாதி பாகுபாடுகளுக்கு எதிரான நடவடிக்கை இல் லாத நிலையில், தற்பொழுது ஜாதிக்கு தடை போடுகின்ற இச் சட்டத்தின்மூலம் சமத்துவம், மனிதநேயம் பாதுகாக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருதி இச்சட்டத்தை வரவேற் கிறார்கள்.

சமூகவியலாளரும், இந்திய அமெரிக்கராக சியாட்டில் மாநகர் மன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒரே உறுப்பினரான ஷாமா சவந்த் கூறுகையில், இந்த சட்டமானது, ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு எதிரானது அல்ல, நாடு, மத எல்லைகளைக் கடந்து ஜாதி பாகுபாடுகளால் ஏற்படுகின்ற பாதிப்புகுறித்து அக்கறை கொண்டுள்ளதாக உள்ளது.

இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயத்தில் பிறப்பின் அடிப்படை யிலும், தொழிலின் அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுள்ளதாக ஜாதிய முறை இருந்து வந்துள்ளது. ஜாதிய முறை முசுலீம்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகளிலும் பல நூற் றாண்டுகளாக தொடர்ந்து நீடித்து இருந்து வந்துள்ளது.

பிரமிட் போன்ற ஜாதி அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் (தாழ்த்தப்பட்டோர்) அடித்தட்டு வகுப்பினராக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்த ஓராண்டில் இந்தியாவில் 1948இலிருந்து தீண்டாமை கடைப்பிடிக்கப்படக் கூடாது என்று உள்ளது.

கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள சமத்துவத்துக்கான அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமாகிய தேன்மொழி சவுந்தரராஜன் கூறுகையில், சியாட்டில் சிட்டி ஹால் பகுதிகளில் இந்த சட்டத்தை வலியுறுத்திய போராட்டங்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர் களுக்கான செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சி யான செயல்பாடுகள் காரணமாக இச்சட்டத் துக்கு ஆதரவு பெருகியது. என்றார்.

புலம் பெயர்வோர் குறித்த ஆய்வு நிறு வனத்தின் ஆய்வுத் தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து புலம் பெயர்வோர் பன் னாட்டளவில் அதிக அளவில் அமெரிக்க அய்க்கிய நாட்டி லேயே உள்ளனர். 1980களில் புலம் பெயர்ந்தோர் சுமார் 2,06,000 பேர். 2021இல் சுமார் 27 லட்சம் எண்ணிக்கையில் உள்ளனர்.

2010 கணக்கெடுப்பின்படி தெற்காசியாவி லிருந்து அமெரிக் காவுக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 35 லட்சமாக இருந்து தற்பொழுது 54 லட்சம் பேராக அதிகரித்துள்ளது. பங்களா தேஷ், பூடான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டில் இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.

பிறந்த ஊரைவிட்டு, மாநிலத்தை விட்டு, நாட்டை விட்டு, ஆசியக்கண்டத்தைவிட்டே பிழைப்புக்காக இடம்பெயருகின்ற வர்கள் ஜாதி இழிவுகளை சுமந்தபடியே அமெரிக்க நாட் டிலும் ஜாதியின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். ஜாதி இழிவுக்கு எதிரான மக்கள் போராட்டம் எழுச்சிபெற்றதன் விளைவாக தற்பொழுது அமெரிக்க அய்க்கிய நாட்டில் சியாட் டில் மாநகர் மன்றத்தின் புதிய சட்டத்தால் ஜாதிக்கு சவுக்கடி விழுந்துள்ளது பாராட்டத்தக்கது.

No comments:

Post a Comment