Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
உலகெங்கும் சமூகநீதி!
February 27, 2023 • Viduthalai

கறுப்பின மக்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் ஒதுக்கி வைக்கப் பட்டவர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் உரிய பங்கினைத் தரும் மசோதாக்கள் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நிறைவேறி யுள்ளன. இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தப் போவதாக வாக் குறுதி அளித்து மெக்சிகோவின் அதிபரான ஆண்ட் ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் (அம்லோ) அந்த வாக்குறுதிகளில் ஒன்றான தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவர் முன்வைத்த தேர்தல் சீர்திருத்தங் களில் ஒன்றான குடியேற்ற மக்கள், கறுப்பினத்தவர், பழங்குடியினர், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உரிய பிரதி நிதித்துவத்தை வழங்கும் அம்சம் அடங்கிய மசோதா நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டது.

இந்த மசோதா மீது விவாதம் நடத்திய செனட் அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோ தாவை முழுமையாக ஆதரித்தவர்களின் எண் ணிக்கை 72 ஆகவும், எதிர்ப்பு மற்றும் சில அம்சங்கள் மீது கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆகவும் இருந்தது. பெரும்பான்மை ஆதரவு இருந்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் தேர்தல் அமைப்புகள் பற்றிய பொதுவான சட்டம், அரசியல் கட்சிகள் குறித்த சட்டம் மற்றும் நீதித்துறை குறித்த சீர்திருத்தங்களும் அடங்கும்.

சமூகநீதி என்பது இந்திய அளவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மக்கள் நேசிக்கும் கோட்பாடு! 

எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புக் குரலைக் கொடுக்கிறார்களே - என்று வடபுலத் தலைவர்கள் குறிப்பாக பிஜேபி - சங்பரிவார் கூட்டத்தார் கூறி வருகிறார்களே!

அதற்கான பதிலும் நாம் சொல்லுவதைக் காட் டிலும் மற்றவர்களே ஒரு மனதாகச் சொல்லுவது - தமிழ்நாடு பெரியார் மண் - திராவிட மண் என்பது தான்.

ஏன் அப்படியொரு கருத்து உருப் பெற்றுள்ளது? காரணம் வெளிப்படை! இந்நாட்டில் உள்ள ஹிந்து மதம் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டு கிறது - உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பிளவை கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் நிலை நிறுத்துகிறது.

தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கல்வி உரிமை கிடையாது. பிறப்பின் அடிப்படையில் அவர்கள் கீழ்நிலையில் வதைக்கப் படுகிறார்கள்.

இந்த நிலையில்தான் தந்தை பெரியார் களத்திற்கு வந்தார் - சுயமரியாதை இயக்கம் கண்டார்.

பிறப்பால் பேதத்தை உண்டாக்கியவர் கடவுள் என்றால் அதனை எதிர்ப்பேன் என்றார்; மதம் என்றால் அதன் மூல வேரை அழிப்பேன் என்றார்.

படிக்க உரிமை கிடையாது என்று ஆக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியில், உத்தியோகத்தில் முன் னுரிமை விகிதாசாரம் தேவை என்றார். "அனை வருக்கும் அனைத்தும்" என்றார்.

இந்த வகையில் இந்தத் தத்துவமும், செயல்பாடும் எங்கெங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் தலையெடுக்க ஆரம்பித்து விட்டது.

ஆம், பெரியார் உலகமயமாகிறார். "மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்றார் தந்தை பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர். அதனைக் கண் முன்னே இப்பொழுது காண்கிறோம்.

இந்தியாவில் மக்கள் தொகையில் சரி பகுதியான பெண்களுக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத் திலும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு 25 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்றத்தில் கிடப்பில் கிடப்பது வெட்கக்கேடு!

வெல்லட்டும் சமூகநீதி!

செல்லட்டும் தேவைப்படும் இடங்களுக் கெல்லாம்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn