பாஜகவுக்கு எதிராக வரும் 28ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்! தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

பாஜகவுக்கு எதிராக வரும் 28ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்! தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு


சென்னை பிப் 24 பாஜகவுக்கு எதிராக வரும் 28-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என விசிக தலைவர்  திருமா வளவன் அறிவித்து உள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன் னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் பிப்ரவரி 28 ஆம் நாள் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது என  22.02.2023 அன்று  கூடிய விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

 திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அரசு பொறுப் பேற்ற நாளிலிருந்து அதனைச் செயல்பட விடாமல் முடக்குவ தற்குத் தமிழ்நாட்டில் திட்ட மிட்ட முறையில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மத அடிப்படையில் வெறுப்புப் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு ஜாதி வெறியையும் ஊக்கப்படுத்தி வருகின்றன.  

இத்தகைய மக்கள்விரோத போக்குகளுக்கு தமிழ்நாடு ஆளுநரும் துணையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன், அவரது நடவடிக்கை கள் சனாதன சக்திகளின் வன்முறை போக்குகளுக்கு இந்திய ஒன்றிய அரசின் மறைமுகமான ஆதரவும் இருக்கிறது எனக் காட்டுகிறது.  

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த வாசகத்தைப் படிக்க மறுத்த ஆளுநர், இன்றும் தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கடமையைச் செய்யாமல், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கு அதிமுகவுக்கு பிரச் சாரம் செய்வதுபோல அவரது பேச்சுகளும் அறிக்கைகளும் உள்ளன. இவை எல்லாமே வட மாநிலங்களில் செய்வதைப் போல தமிழ்நாட்டிலும் செய்து இதனை ஒரு கலவரபூமியாக மாற் றும் சதித்திட்டத்தோடு செய்யப் படுகின்றன. சனாதனப் பயங் கரவாதிகளின் இத்தகைய சதியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூக அமைதியையும் சமய நல்லிணக் கத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை சனநாயக சக்திகளான நம் அனைவருக்கும் உள்ளது. அதன டிப்படையில் தான் சனாதன சக்திகளுக்கு எதிராக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத் துவது என விடுதலைச் சிறுத் தைகள் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, பிப்ரவரி 28- ஆம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத் தில் சனநாயக சக்திகள் திரளாகப் பங்கேற்க வேண்டுமாறு அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment