‘நீட்' தேர்வு விலக்கு: எடப்பாடி மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

‘நீட்' தேர்வு விலக்கு: எடப்பாடி மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 6- நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் உரிய முகாந் திரத்துடன் முந்தைய அதிமுக அரசு வழக்கு தாக்கல் செய்யாம லும், காலாவதியான சட்டங்க ளின் கீழ் கடமைக்காக வழக் கினை தவறாக தாக்கல் செய்துள் ளதாலும் தமிழ்நாடு அரசு இவ் வழக்கை சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து நடவ டிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வழக்கு குறித்து சட்ட மன்ற எதிர்கட்சித்தலைவர் எடப் பாடி அறிக்கை வெளியிட்டிருந் தார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள பதிலில், “திமுக தலைமையிலான புதிய அரசு 2021, மே 7இல் பொறுப்பேற்ற வுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021, ஜூன் 5 அன்று வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து 2021, ஜூன் 10 அன்று ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழு ஒன்று அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்தக் குழு தனது பரிந்துரை களை 2021, ஜூலை 14 அன்று அரசுக்கு வழங்கியது. இந்த பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு ஆராய்ந்து, மருத்துவக் கல்வி சேர்க்கை முறைகளில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதி பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில், மருத்துவக்கல்வி சேர்க் கையின் அனைத்து நிலைகளி லும் ’நீட்’ தேர்வினை புறந்தள்ளு வதற்கு, தமிழ்நாடு மாநில சட் டம் 3/2007அய்ப் போன்றதொரு புதிய சட்டத்தினை மாநில அரசு இயற்றி, குடியரசுத் தலை வரின் ஒப்புதல் பெற முயற்சிக் கலாம் என்று குழு பரிந்துரைத் தது. 

தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட செயலாளர்கள் அடங்கிய குழு அளித்த பரிந்துரையின் அடிப் படையில், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 2021, செப்டம்பர் 13 அன்று தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக் கான சேர்க்கைச் சட்டம் 2021 என்ற சட்டமுடிவு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, 2021 செப்.18 அன்று ஆளுநரின் ஒப்புதலுக் காக அனுப்பப்பட்டது. 

ஆளுநர் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு, 2022 பிப்.8 அன்று சட்டமன்றப் பேரவையில் மீண் டும் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டு குடியரசுத்தலைவரின் ஒப் புதலுக்கு அனுப்ப ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மேற்படி சட்ட முன்வடிவை ஆளுநர் ஒன் றிய அரசின் உள்துறை அமைச் சகத்திற்கு அனுப்பியுள்ளார். 

ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகமும் இந்த சட்ட முன்வடிவு குறித்து சில தெளி வுரை மற்றும் விளக்கங்களை ஆளுநர் அலுவலகம் மூலமாக மாநில அரசை கேட்டுக் கொண் டது. அவைகளின் மீதான மாநில அரசின் அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்ப 2022, ஜூலை 27 அன்று ஆளுநர் அலு வலகத்திற்கு அனுப்பப்பட்டது. 

ஆளுநர் அலுவலகம்,ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத் திடமிருந்து பெறப்பட்ட மத்திய அரசின் உயர்கல்வி அமைச்சகத் தின் கருத்துகள் மீது விளக்கங்கள் கோரிய கடிதம், தமிழ்நாடு அர சின் சட்டத் துறையின் செயலா ளருக்கு 2022, ஆக.26 நாளிட்ட கடிதத்தின் மூலமாக சட்டத் துறையில் பெறப்பட்டது.அதற் கான விரிவான குறிப்பு, 2022, அக்.10 அன்று ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஒன்றிய அர சால் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களுக்கும் தமிழ்நாடு அரசு விளக்கம் தந்துள்ள நிலை யிலும், இந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு மவுனம் காத்து வருகிறது. 

அவசர கோலத்தில் அதிமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட சட்ட முன்வடி வின் மீது குடியரசுத்தலைவர் ஒப்புதலை விரைவாக பெற்றுத் தருமாறு ஒன்றிய அரசை தமிழ் நாடு அரசு தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. உச்ச நீதி மன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் தள்ளுபடி செய்த நிலையில், உரிய சட்ட விதிகளை ஆராயாமல் அவசர கோலத்தில் நடைமுறையில் உள்ள சட்டங் களுக்கு பதிலாக முந்தைய சட்ட விதிகளை எதிர்த்து மற்றும் ரத்து செய்யுமாறும் குறிப்பிட்டு 2020, ஜன.4 அன்று ஒரு வழக்கு முந்தைய அதிமுக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. 

அதாவது 1956ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் குழும சட் டம் மற்றும் 1948ஆம் ஆண்டு பல் மருத்துவச் சட்டம் ஆகிய வற்றிற்கு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தால், இளநிலை மருத்துவப் பட்டம் மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளுக்கு 2016 - 2017ஆம் கல்வியாண்டு முதல் நீட் எனும் தேசிய தகுதி பொது நுழைவுத் தேர்வு, மருத் துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஆனால், மேற்குறிப்பிட்ட 1956ஆம் ஆண்டு இந்திய மருத்துவ குழும சட்டம் திரும்ப பெறப்பட்டு மருத்துவப் படிப்பு களை ஒழுங்கமைக்க தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019, 8.8.2019 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு பின் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது நீட் தேர்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை குறித்த பிரிவுகள் தேசிய மருத்துவ ஆணைய சட் டம், 2019இன் படி வரையறுக் கப்பட்டுள்ளது. 

முந்தைய அதிமுக அரசு மேற் கண்ட மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் தவறான முந் தைய சட்ட விதிகளைக் குறிப் பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளதால், மேற்கொண்டு இவ்வழக்கினை தொடர்ந்து நடத்தினால் அது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாதகமாக அமையும் என்பதா லும், ஏற்கனவே தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 குடியரசுத்தலை வரின் ஒப்புதலை எதிர் நோக்கி இருப்பதாலும் மேற்கண்ட வழக்கினை தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. 

தமிழ்நாட்டு மருத்துவ மாண வர்களின் நம்பிக்கையை காப் பாற்றும் விதமாகவும், நீட் தேர்வு முறையில் விலக்கு அளிக்கும் வகையிலும் தேவையான முயற் சிகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் உரிய முகாந்திரத்துடன் முந் தைய அதிமுக அரசு வழக்கு தாக் கல் செய்யாமலும், காலவதியான சட்டங்களின் கீழ் கடமைக்காக வழக்கினை தவறாக தாக்கல் செய்துள்ளதாலும், அதனை தொடர்ந்து நடத்தினால் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு பாதக மாக சூழல் ஏற்படும் என்பதாலும் தமிழ்நாடு அரசு வழக்கை சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோ சித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உண்மை இவ்வாறு இருக்க எதிர்கட்சித் தலைவர் முந்தைய ஆட்சியின் அவலங் களை மறைப்பதோடு, இது போன்ற மக்களை திசை திருப் பும் முயற்சியில் இறங்கியுள்ளார்" என தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment