Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்க்கை முறை மாற்றம் - கல்லீரல் நோய் அதிகரிப்பு - மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
January 26, 2023 • Viduthalai

சென்னை,ஜன.26- தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை (TANKER) சார்பில் 30ஆவதுஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (25.1.2023) நடைபெற்றது.

விழாவின் தொடக் கத்தில் நடைபெற்ற எஸ்.வி.வெங்கடேசன் மற்றும் மாலதி வெங்க டேசன் நினைவுக் கருத்த ரங்கில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வல்லுநர் கோமதிநரசிம் மன் பங்கேற்றுப் பேசும் போது, ``தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக கல்லீரல் பாதிப்பு நோய் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நான் சிகிச்சை அளித்த நோயா ளிகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, கடந்த 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரைவாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக ஏற்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 24 விழுக்காடாக இருந்தது. இது 2015-2019 வரையிலான காலகட் டத்தில் 42 விழுக்காடாக உயர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயர வாய்ப்புள்ளது'' என்றார்.

பின்னர் நடைபெற்ற விருது வழங்கும் விழா வில், `தி இந்து' குழுமத் தலைவர் மாலினி பார்த்த சாரதி பங்கேற்று, சிறு நீரக நோய் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இளம் மருத் துவர் விருதை மனிஷ் ரமேஷ் பால்வானிக்கும், சிறுநீரக நோய் மருத்துவர் களில் தனித்துவமாக சிகிச்சை அளித்த மருத்து \வர் விருதை விவேக் குட்டேவுக்கும், சிறுநீரக நோய் விழிப்புணர்வில் சிறந்து  விளங்கியதற்கான விருதை மஞ்சுளா கல்யா ணுக்கும், வாழ்நாள் சாத னையாளர் விருதை மருத் துவர் தன்மயி தாசுக்கும் வழங்கினார். 

பின்னர் விழாவில் மாலினி பார்த்தசாரதி பேசியதாவது:

சிறுநீரகம் உடல் வளர்சிதை மாற்றத்துக்கு மட்டுமல்லாமல், உட லில் உள்ள கழிவுகளை அகற்றி குருதி அழுத் தத்தை ஒழுங்குபடுத் துகிறது.

 இந்தியாவில் சிறுநீரக நோய், பொது சுகாதாரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிப் பதற்கான ஆராய்ச்சிகள், விழிப்புணர்வு உள்ளிட்ட வளங்கள் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.

விழாவில் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு, மேனாள் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் ஜெயந்த்முரளி, அறக்கட்டளை நிறுவனர் ஜார்ஜ் ஆபிரகாம், நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி, அறங்காவலர் லதா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn