Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பம்பை நதியா - பக்தர்களைக் கொல்லும் நதியா?
January 12, 2023 • Viduthalai

பம்பை நதியில் நீர் குறைவாக ஓடுவதாலும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து குளிப்பதாலும், சிறுநீர், மலம் கலந்து விடுவதாலும் நீரில் இ-கோலி பாக்டீரியா உருவாகியுள்ளது. இதனால் மகர விளக்கு நாட்களில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது

கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு  நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் உள்ள பம்பை நதியில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று கட்டுப்பாடுகளால் மக்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த முறை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால்  கூட்டம் அதிகரித்துள்ளது

இதனால் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து வருபவர்கள் இணைய மற்றும் உடனடி முன்பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம்  கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு  சன்னிதானப் பகுதியில் இருந்து உடனடியாக மக்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார் வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந் ததைத் தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன்பின்னர் 3 நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. மகரஜோதி தரிசனத்தை காண நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஜனவரி 14 ஆம் தேதி வரையிலான இணைய முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் பலர் முன்பதிவு செய்யாமல் வந்து கொண்டிருக்கும் நிலையில், கோயிலுக்கு முன்பதிவு செய்யாமல் வர வேண்டாம் எனவும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் சபரிமலையில் உள்ள பம்பை நதியில் மிகவும் குறைந்த அளவே நீர் ஓடுவதால் அதன் ஓட்டம் கிட்டத்தட்ட நின்று போய்விட்டது, இந்த நீரில் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து குளித்தவண்ணம் உள்ளனர். மேலும் மலைப்பகுதியில் மலம் கழித்துவிட்டு ஆற்றுநீரில் கழுவுகின்றனர். இதனால்  இ-கோலி பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பம்பை நதியில் உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் கேரள சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

மனித உடலிலேயே இகோலி பாக்டீரியாக்கள் உள்ளன. இது உணவு செரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால்  சுகாதாரமில்லாத நீர் உடலினுள் செல்லும் போது ஷிகா என்னும் நச்சுத்தன்மையை உருவாக்குகிறது. இதன் மூலம் உடல் பலவீனப்படுகிறது. இது குடலுக்கு சேதத்தை உண்டாக்கும். கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதோடு உயிருக்கு ஆபத்தான அறிகுறிகளையும் உண்டாக்கும்.

'இந்தியா டுடே' ஏடு (19.12.2007) சபரிமலை பம்பை நதியைப் பற்றி விலாவாரியாக எழுதியதுண்டு. ஆண்டுதோறும் 3 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வந்து போகிறார்கள். பம்பை நதியில் 100 மில்லி லிட்டர் நீரில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த பாக்டீரியாவின் அளவு 500அய்த் தாண்டினாலே அபாயகரமானது என்கிறது ஆய்வு. இந்த ஆய்வு என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்டதாகும்.

இப்பொழுது சொல்லுங்கள் கடவுள், கோயில், பக்தி, புண்ணிய முழுக்கு என்பது மக்களின் நன்மைக்கா? தீமைக்கா?? 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn