இது மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

இது மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டு

2002ஆம் ஆண்டு அசோக் பர்மார் என்ற இளைஞர் ஹிந்துத்துவ அமைப்பினரின் மூளைச்சலவையில் அகப்பட்டு காவிப்பட்டை அணிந்து ஒரு கையில் திரிசூலம் ஒரு கையில் வாளை எடுத்துக்கொண்டு குஜராத் வீதிகளில் சென்றார். கலவரத்தில் ஈடுபட்டார் என்று இவரும் விசாரணை அமைப்பினால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றங்களுக்கு சாட்சி எதுவும் இல்லாதால் இவர் சில மாத சிறைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். 

சிறையில் இருந்துவந்த பிறகு இவரது எதிர்காலம் சூனியமாகிவிட்டது. இவருக்கு கேரளாவைச் சேர்ந்த ஒரு அமைப்பு 10.09.2019 அன்று குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர் ஒருவரின் கைகளால் ஏக்தா (ஒற்றுமை செருப்புக்கடை) ஒன்றை வைத்துக்கொடுத்தார்கள். கடை வைத்த சில மாதங்களுக்குப் பிறகு கடைக்கான உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தால் அகமதாபாத் மாநகராட்சி இவரது கடையை பிடுங்கிக் கொண்டது. பின்னர் இவர் வேறு வழியில்லாமல் கடை இருந்த பகுதியில் சாலை ஓரம் அமர்ந்து செருப்பு பழுதுபார்த்து தனது வாழ்க்கையை ஓட்டுகிறார்.

No comments:

Post a Comment