ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று (23.1.2023) சென்னை பெரியார் திடலுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வருகை தந்து, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பயனாடை அணிவித்தார். அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மு.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, காங்கிரசு கட்சி செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, நாசே இராமச்சந்திரன், இதயதுல்லா, சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment