ஈரோடு, ஜன.25 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை கீழ்கண்ட 6 குழுக்களிடமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
பறக்கும் படை குழு எண் 1: 7094488017
பறக்கும் படை குழு எண் 2: 7094488049
பறக்கும் படை குழு எண் 3: 7094488072
நிலையான கண்காணிப்பு குழு எண் 1: 7094488076
நிலையான கண்காணிப்பு குழு எண் 2: 7094488982
நிலையான கண்காணிப்பு குழு எண் 3: 7094488983.
No comments:
Post a Comment