ஈரோடு திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

ஈரோடு திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி நிகழ்ச்சி

ஈரோடு, ஜன. 8- தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரனும். காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் களில் ஒருவருமான மேனாள் அமைச்சர் ஈ.வெ.கி.ச.இளங்கோவ னின் மகனும் ஈரோடு கிழக்குச் சட்டமன்ற உறுப்பினருமான  திரு மகன் ஈவெரா 04.01.2023 அன்று மறைவுற்றார் செய்தி அறிந்த கழகத்தோழர்கள் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அமைப்புச்செயலாளர் ஈரோடு. த.சண்முகம் தலைமையில்சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

12.3 0மணியளவில்  பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண் முகம் அவர்களது தலைமையில் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்புச் செயலாளர் த. சண்முகம். பொதுக்குழு உறுப்பி னர்கள் சேலம் பழனி புள்ளை. யண்ணன், பாலகிருட்டிணன், ஓமலூர் சவுந்தரராசன், மண்டல தலைவர் இரா.நற்குணன், மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, செயலாளர் மா.மணிமாறன், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், செயலாளர் மு.சென்னியப்பன், பேராசிரியர் ப.காளிமுத்து, மாவட்ட தொழிற் சங்க செயலாளர் தே.காமராஜ், கோபி. யோகானந்தம், பவானி அசோக்குமார், வீ. தேவராஜ், து. நல்லசிவம், கோ.திருநாவுக்கரசு, ப.க.வைச்சார்ந்த கனிமொழி நடராஜன், தங்கமுத்து, அசேன், பொன்னுசாமி , சிவகிரி சண்முகம், ரமேஷ், கார்த்திக்ராம் கண் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  கலந்துகொண்டனர். 

எவ்வித சடங்குகளும் இன்றி ஈரோடு மின்மயானத்தில் எரி யூட்டப்பட்டது.

No comments:

Post a Comment