8.1.2023
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
தமிழ்நாடு ஆளுநரின் மாநில விரோத போக்கை கண்டித்து திமுக அணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த எதிர்ப்பினை தெரிவிக்கும் என சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
கரோனா தொற்று காரணமாக, இன்டர்ன்ஷிப்பை மருத்துவ மாணவர்கள் ஜூன் மாதம் முடிக்க உள்ள நிலையில், மருத்துவ முதுநிலை படிப்பு அனுமதிக்கான நீட்- 2023 தேர்வு தேதி மார்ச் 31 என தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
ஒன்றிய அரசுப் பணியில் ஓய்வு பெற்ற நூறு அதிகாரிகள், போபால் எம்பி பிரக்யா சிங் தாக்கூரின் மதவெறியைத் தூண்டும் வெறுப்பு பேச்சை கண்டித்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 67.5 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர், 39.4 சதவீதம் பேர் எடை குறைவாக உள்ளனர். எனவே, வாரத்தில் ஐந்து நாட்கள் மதிய உணவில் முட்டை வழங்க வேண்டும் என்று ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிவில் அமைப்புகளின் சார்பில் நூறு பேர் வலியுறுத்தியுள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment