சென்னை, ஜன. 3- எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந் தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ தெரிவித்தார்..
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக திராவிட மாடல் ஆட் சியை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்துகிறார். திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கூட்டணி வலுவாக இருக் கிறது. அகதிகள் வாழும் சிறப்பு முகாமில் முதல மைச்சர் கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவை யான வசதிகளை செய்து தரவேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில்இருந்தவர்கள் விடு தலையானதில் மிக வும் மகிழ்ச்சியடைந்தேன்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடி யும். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என தெரிய வில்லை.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் அள வுக்கு எனக்கு சக்தி இல்லை. ராகுல் காந்தி யின் ஒற்றுமை நடைபய ணத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களின் ஆதரவை திரட் டிய பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற் கும் திட்டத்தில் ராகுல் இருக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment