சென்னை,ஜன.29- தடையை மீறி சென்னை பல் கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர்.
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை 27.1.2023 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்அய்) கிளை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எஸ்எஃப்அய் அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஆனால், தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்க்கும் நிகழ்வு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் கிளை உறுப்பி னர்கள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளியில் தங்களது மடிக்கணினி மூலமாக பிரத மர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்த்தனர்.
No comments:
Post a Comment