கல்வித்துறையில் மோடி அரசு தோற்றுவிட்டது: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

கல்வித்துறையில் மோடி அரசு தோற்றுவிட்டது: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி,ஜன.24- கல்வித்துறையில் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான கல்விநிலையின் அறிக்கையை சுட்டிக்காட்டியே இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கல்விநிலை குறித்த மோடி அரசின் ரிப்போர்ட் அட்டையும் "எஃப்" பெறுகிறது. எஃப் என்றால் ஃபெயில் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில் சமீபத்திய கல்விநிலை குறித்த ஆண்டு அறிக்கை (கிஷிணிஸி 2022) செய்தியை சுட்டிக்காட்டி உள்ளார்.

அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 27.3 விழுக்காடாக இருந்தது. அது, 2022இல் 20 விழுக்காடாக குறைந்துள்ளது. அதேபோல், 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாசிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையும் 2018ஆம் ஆண்டு இருந்த 50.5 விழுக்காட்டிலிருந்து 2022இல் 42.8 விழுக்காடாக குறைந்துள்ளது.

முன்னதாக, 30 லட்சம் காலிபணியிடங்கள் உள்ள நிலையில், புதிதாக வேலைக்குச் சேர்ந்த 71,000 பணிநியமனக் கடிதங்களை வழங்கியதற்காக மோடியை கடுமையாக குற்றம்சாட்டினார். அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," நரேந்திர மோடி ஜி, அரசுத்துறைகளில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இன்று நீங்கள் வழங்கியிருக்கும் 71 ஆயிரம் பணிகளுக்கான பணிநியமன ஆணை கடலில் கலந்த சிறுதுளியைப் போன்றதே. இது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒரு செயல்பாடு மட்டுமே. நீங்கள் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொல்லி இருந்தீர்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே என்று இளைஞர்களுக்குச் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment