சென்னை, ஜன. 9-- சி.எம்.டி.ஏ. சார்பில் கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கட்டுப்பாட் டில் உள்ள, கோயம்பேடு மொத்த விற்பனை அங் காடி வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அவர், பொது மக்கள் மற்றும் வியாபாரி களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுரைகளை வழங்கி னார். பின்னர் செய்தியா ளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மலர் வணி கப் பகுதியில் ஏற்கெனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் பணியாளர்கள் தங்கும் விடுதி, உணவு தானிய வணிகப் பகுதி, ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் வியாபாரத் துக்கு உட்படுத்தாமல் உள்ள கடைகளின் நிலை உள்ளிட்டவை குறித்தும், திறந்த வெளி பகுதிக்கென (ஓஎஸ்ஆர்) ஒதுக்கப் பட்ட இடங்களை மறுபயன் பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்தும் கள ஆய்வு மேற்கொண்டோம்.
வரும் பிப்ரவரி மாதத் துக்குள் கோயம்பேடு மொத்த விற்பனை அங் காடியில் முழு ஆய்வையும் மேற்கொண்டு, இந்த அங்காடிவளாகத்தை மேம்படுத்தும் பணிகளை அனைவரின் ஒத்துழைப் போடு மேற்கொள்வோம். இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்புச் சந்தை வணிக வாகனம் நிறுத்து மிடத்தில், 3.5 ஏக்கர் பரப் பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அங் காடி நிர்வாகத்தால் அமைக் கப்பட உள்ளது. கோயம் பேடு அங்காடி கழிவுக ளைப் பயன்படுத்தும் வகை யில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின் போது, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன் மைச் செயலர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச் சிக் குழுமத்தின் உறுப்பி னர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயல் அலுவலர் எம்.லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment