ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயக நடைமுறைகளுக்கு பேராபத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயக நடைமுறைகளுக்கு பேராபத்து

இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை, ஜன. 10- இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடப்பு ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட் டத் தொடரை தொடங்கி வைத்து தமிழ்நாடு ஆளுநர் உரையாற்றியுள்ளார். அரசமைப்பு அதிகாரம் பெற்ற மாநில அரசின் தலைவர் ஆளு நர். இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும். இந்த வகையில் தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் சட்டமன்றப் பேர வையில் வாசிக்க கடமைப்பட்ட வர். இந்த முறையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அமைந்த காலம் தொட்டு பின்பற்றி வரு வது மரபாக அமைந்துள்ளது. இந்த முறையில்தான் 9.1.2023 அன்று ஆளுநர் உரையாற்றும் நிகழ்வு நடந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்ட மன்றப் பேரவையின் மாண்புக்கு நீங்கா களங்கம் ஏற்படுத்தும் முறையில் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண் டிருப்பது உச்சமட்ட அத்துமீற லாகும். 

அவையின் மரபுகளை உடைத்தும், தமிழ்நாட்டின் நன்மதிப்பு பெற்ற தலைவர்கள் பெயர்களையும், ஆளும் அரசு "திராவிட மாடல் ஆட்சி" என்று உரிமை கொண்டாடுவதை நிரா கரித்தும் அவமதித்துள்ளார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதை ஏற்க மறுத்துள்ள ஆர்.என்.ரவியின் அநாகரிகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண் டிக்கிறது. அண்மைக் காலமாக ஆளுநரும், பாஜக மற்றும் சங் பரிவார் கும்பலும் தமிழ்நாட் டின் அமைதி நிலையை சீர் குலைத்து, கலகத்தை ஏற்படுத் தும் நோக்கத்தோடு செயல் பட்டு வருவதன் தொடர்ச்சி யாகவே ஆளுநர் நடவடிக்கை அமைத்திருக்கிறது. இது ஜன நாயக நடைமுறைகளுக்கும், அமைதி வாழ்வுக்கும் பேரா பத்து ஏற்பட்டிருப்பதை வெளிப் படுத்தியுள்ளது. இந்தப் பேரா பத்தை எதிர் கொண்டு முறி யடிக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட் சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு கேட்டுக் கொள்கிறது. 

இவ்வாறு அதில் கூறியுள் ளார்.

No comments:

Post a Comment