புதுடில்லி,ஜன.3- கடந்த 2021ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துகளில் 1 லட்சம் பேர் மரண மடைந்துள்ளனர். இதில் இரு சக்கர வாகனம் மிதிவண்டிகளில் சென் றவர்கள், பாதசாரிகளும் அடங்குவர். 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021இல் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் உயர்ந் துள்ளதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
எனினும், கார், லாரி மற்றும் மூன்றுசக்கர வாகனங்களில் சென்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 31 சதவீதம் குறைந்து 35,253-ஆக இருந்தது.
பாதுகாப்பு வழிமுறைகளை முறை யாக கடைப்பிடிக்காததே சாலை விபத்துகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக் கிய காரணமாக உள்ளது. எனவே, அரசுகள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகி யுள்ளது.
வாகன விற்பனை, சாலை வசதி அதிகரிப்பின் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை யும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. மொத்த உயிரிழப்புகளில் இரு சக்கர வாகனங்கள் மிதிவண்டி பயன் பாட்டாளர்கள், பாதசாரிகளின் பங்கு 2021இல் 67 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2017இல் இது 49.3 விழுக்காடாக மட் டுமே இருந்தது. பாதசாரிகள், சைக் கிள் ஓட்டுப வர்களைப் பொருத்தவரை அவர் கள் சிரமமின்றி பாதுகாப்பான பாதையில் செல்ல போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத தால் அதிக உயிரிழப்புகள் ஏற்படு கின்றன.
No comments:
Post a Comment