புதுடில்லி, டிச 27 சீனாவும், பாகிஸ் தானும் இணைந்து இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளது என டில்லியில் நடைபெற்ற நடை பயணம் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார்
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் தற்போது டில்லியில் நடைபெற்று வருகிறது. அவரது நடைப்பயணத்தின்போது, அவ்வப்போது ஒன்றியஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருவதுடன், சீனா, பாகிஸ்தான் குறித்தும் தகவல்களை பேசி வருகிறார்.இந்த நிலையில், தற்போது, ராகுல்காந்தியின் ஒற் றுமை பயணம் 110ஆவது நாளை எட்டி உள்ளது. நடை பயணத்தின் ஒரு பகுதியாக டில்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி 24ஆம் தேதி மாலை உரையாற் றினார். முன்னதாக இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். இந்த உரையாடல் ராகுல்காந்தியின் யூடியூப் சேனலில் பதிவிடப்பட் டுள்ளது. இந்த உரையாடலின் போது ராகுல்காந்தி பேசுகையில், சீனாவும், பாகிஸ்தானும் ஒன்றாக தயாராகிக்கொண்டிருக்கின்றன. போர் வந்தால் இரு நாட்டுடன் தான், அவ்வாறாயின் இது இந்தி யாவுக்கு அதிக இழப்பாக இருக்கும். இந்தியா இப்போது மிகவும் பாதிக் கப்படக்கூடிய நிலையில் உள்ளது. நான் உங்கள் மீது (ராணுவம்) மரி யாதை மட்டும் கொண்டிருக்க வில்லை, அன்பும் அரவணைப்பும் கொண்டுள்ளேன். நீங்கள் இந்த நாட்டை பாது காத்துள்ளீர்கள். நீங்கள் இல்லை என்றால் இந்த நாடு இருக்காது. நமக்கு பாகிஸ்தான், சீனா என இரு நாடுகளும் தொல்லைக்கொடுத்து வருகின்றன.
சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ ரீதியில் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் ஒன்றாக செயல்படுகின் றன’ என்றவர் போர் ஏற்பட்டால், இரு நாடுகளும் இணைந்து நம்மை தாக்கும் வாய்ப்பு உள்ளத, ஏதேனும் போர் நடந்தால், இருவருடனும் நடக்கும், அதனால், நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இந்தியா இப் போது மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது என்று ராகுல் காந்தி அச்சம் தெரிவித்தார்.
ராகுலின் நடை பயணத்துக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபயணம் ஒத்தி வைக்கப்பட் டுள்ளது. இந்த இடைவேளைக்கு பிறகு ஜனவரி 3-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment