Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
போன மச்சான் திரும்பி வந்தார்!
December 10, 2022 • Viduthalai

25.09.1948 - குடிஅரசிலிருந்து... 

வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். கதர்ச் சட்டைப் போட்டுக் கொண்ட தோஷத்திற்காக - கிடைத்த பதவி போகாமலிருப்பதற்காகக் கூறுகிறார்கள்.

எதுவும் அவரவர்களாகவே அனுபவித்தால்தான் தெரியும். நமது பிரதமர் ரெட்டியார் அவர்கள் அனுமானில் ஏறிக் கொண்டு பறந்தார் டெல்லிக்கு. வழியிலேயே சகுனத்தடை ஏற்பட்டது. அதாவது அனுமான் பறக்காமல் கீழே இறங்கிக் கொண்டது. சகுனத்தடையையும் லட்சியப்படுத்தாமல் ரயிலில் போய்ச் சேர்ந்தார் டெல்லிக்கு நமது பிரதமர்.

அங்கே கிடைத்த பதில் என்ன தெரியுமா? சென்னை மாகாணத்துக்குத் தேவையான அரிசி கொடுக்க முடியும் என உறுதி கூற முடியாது. பூர்ண மதுவிலக்குச் செய்வதானால் வரவு, செலவைச் சரிகட்ட எங்களை (மத்திய சர்க்காரை)ப் பணம் கேட்கக் கூடாது.

ஜமீன்தாரர்களை ஒழிப்பதானால் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு எங்களை (மத்திய சர்க்காரை)ப் பணம் கேட்கக் கூடாது. (இதே மத்திய சர்க்காரில் உள்ள காங்கிரஸ் அய்கமாண்டுகள்தான் ஜமீன்தாரர்களுக்கு நஷ்டஈடு தாராளமாகக் கொடுக்க வேண்டும் என்று புத்தி சொன்னவர்கள் என்பதை இதுசமயம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.)

மேற்சொன்ன பதில்களைக் கேட்ட நமது பிரதமர் ரெட்டியார் மனம் எப்படியிருந்திருக்கும்? சிந்தித்துப் பாருங்கள். கட்டாயம் அந்த இடத்தில் பிரதமர் ராமசாமி அவர்கள், பெரியார் ராமசாமி அவர்களை நினைத்திருப்பார்! வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்றுகூட மனதில் எண்ணியிருப்பார். ஆனால் வாய்விட்டுச் சொல்ல முடியுமோ? சொன்னால் தொலைந்ததே பிரதமர் பதவி! உடனே வந்துவிடும் 93ஆவது செக்ஷன். அப்புறம் யாருடைய தர்பார் தெரியுமோ? சாட்சாத் பவநகர் மஹாராஜா ஆட்சிதான்! அதையும் நினைத்திருப்பார். வாய்மூடி மவுனியாக வந்து சேர்ந்துவிட்டார். எப்படி சமாளிப்பாரோ? பார்ப்போம். பிரதமர் ரெட்டியார் அவர்கள் வடநாட்டாருக்கு முகத்திலடித்தமாதிரி பண நெருக்கடி நேரத்தில், எங்கள் நாட்டில் இந்திக்காக எதற்கு வீண் செலவு? பெரிய எதிர்ப்பு! என்று கூறி இந்திக்காக தனது சர்க்கார் ஒரு செல்லாக்காசும் செலவு செய்ய முடியாது என்று கூறுவாரா? பார்ப்போம்!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn