பெங்களூரு, டிச. 28, ராகுல் காந்திக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கை பா.ஜ.கவி னரால் சகித்துக் கொள்ள முடிய வில்லை என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கருநாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய் தியாளர்கள் சந்திப்பில் கூறிய தாவது:-
கருநாடக சட்ட சபை தேர்த லுக்காக நானும், எதிர்க்கட்சி தலைவர் சித்தரா மையாவும் பேருந்து பயணத்தை செல்ல உள்ளோம். தற்போது இந்த பேருந்துப் பய ணத்தை நிறுத்தும் நோக்கத்துடன் கரோனா பரவலை அரசு கையில் எடுத்து வருகிறது.
சட்ட சபை தேர்தலை சந்திக்கும் விதமாக மாநிலத்தின் பல பகுதிகளுக்கு காங் கிரஸ் கட்சி பேருந்து பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பேருந்து பயணத்தை தடுக்க அரசால் மட்டும் இல்லை, யாராலும் சாத்தியமில்லை. பேருந்துப் பயணம் திட்ட மிட்டபடி நடைபெறும். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க தயாராகி விட்டனர்.
ராகுல் காந்தியின் நடைப் பயணத்தையும் தடுக்க பா.ஜன தாவினர் முயற் சிக்கிறார்கள். ராகுல் காந்திக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கை சகித்துக் கொள்ள பா.ஜனதாவி னரால் முடியவில்லை. அதனால் தான் நடைப் பயணத்தை தடுக்க முயற்சிக் கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment