பா.ஜ.க.வுக்கு இமாச்சலபிரதேச மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் - ஆனந்த் சர்மா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

பா.ஜ.க.வுக்கு இமாச்சலபிரதேச மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் - ஆனந்த் சர்மா

புதுடில்லி டிச. 10- இமாச்சலபிர தேச மக்கள் பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுத்து உள்ளனர் என்று காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.. 

தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங் கின. தேர்த லில் பதிவான வாக்குகள் 8.12.2022 அன்று எண்ணப்பட்டது. மொத் தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதி களில் வெற்றி பெற்றுள் ளது. இதன் மூலம் இமாச் சலபிரதேசத்தில் காங்கி ரஸ் ஆட்சியமைக்க உள் ளது. பாஜக 23 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இமாச்சலபிரதேச மக்கள் பாஜக வுக்கு சரியான பதி லடி கொடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா தெரிவித் துள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இமாச்சல பிரதேச மக்கள் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற செய் தியை பாஜகவுக்கு தந்துள் ளதாக கூறியுள்ளார். ராணுவத்தில் இணையவி ருந்த இளைஞர்கள் வசித்து வரும் பகுதி களில் பாஜகவுக்கு சரியான பதி லடி அளிக்கப்பட்டிருப்ப தாக ஆனந்த் சர்மா, மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று இமாச்சலபிரதேச மக்கள் கருதுவதாக குறிபிட்டுள்ளார்.

No comments:

Post a Comment