சென்னை -பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் பெயர் சூட்டு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

சென்னை -பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் பெயர் சூட்டு விழா!

தமிழர் தலைவர் வாழ்த்து!

சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் பெயர் சூட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாதது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த வாழ்த்துக் கடித விவரம் வருமாறு:

‘‘நமது இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை - பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு அவர் பெயர் சூட்டும் விழா அழைப்பிதழ் கிடைத்தது. பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ஊரில் இல்லாமையால் இந்த அரும்பெரும் விழாவில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

எதையும் பொருத்தமாகவும், பொருளோடும் காலங்கருதி செய்யும் தங்களுடைய கடமை உணர்வு மிகவும் பாராட்டத்தக்கது.

விழா சிறக்க அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,


(கி.வீரமணி)

தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment