காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்கணும்; இல்லாவிட்டால் அடிதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்கணும்; இல்லாவிட்டால் அடிதான்!

மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை!

மதுரை, டிச. 24 - தமிழ்நாட்டை கலவரக் காடாக மாற்றத் துடிக்கும் சங் பரி வாரங்கள், இங்குள்ள திருவள்ளுவர், பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு காவிச்சாயமும், காவித் துண்டும் அணிவிக்கும் விஷமச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில், இரண்டு நாள்களுக்கு முன்பு மதுரை கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில்  உள்ள எம்ஜிஆர் சிலை மீதும் காவித் துண்டு போர்த்தப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ''எம்ஜிஆர் சிலைக்கு காவிக் கொடியை போட்டவர்கள் கைகளில் கிடைத்தால், அடி நொறுக்கி விடுவோம்'' என்று அதிமுக மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித் துள்ளார். 

மதுரை மாவட்டம் பரவையில் நடை பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார்.  

அப்போது, ''மதுரையில் எம்ஜிஆர் சிலைக்குக் காவிக் கொடியை போட்டு அவமானப் படுத்தியவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். எம்ஜிஆர் சிலை மீது காவிக் கொடியை போட்டவர் இழிபிறவி. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியதுடன், ''எம்ஜிஆர் சிலைக்கு காவிக் கொடியை போட்ட வர்கள் கைகளில் கிடைத்தால், அடி நொறுக்கிவிடுவோம்; காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்'' என்றும் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment