குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசளிப்பு

போபாலில் அண்மையில் 25.12.2022 அன்றுவரை நடைபெற்ற ஜூனியர் நேஷனல் ஈக்வெஸ்ட்ரியன் வாகையர் பட்டப் போட்டியில் தமிழ்நாட்டின் முன்னணி குதிரையேற்ற பயிற்சி மய்யமான சென்னை ஈக்விட்டேஷன் சென்டரின் குதிரையேற்ற வீரர்-வீராங்கனைகள் நாட்டிலுள்ள மற்ற கிளப்களைவிட அதிக பதக்கங்களை வென்றனர். 

21 வயதுக்கு உட்பட்ட குதிரையேற்ற வீரர்களுக்கான இந்தியாவின் உயர்நிலைப் போட்டியான இதில் மொத்தமாக 9 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை  வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

குதிரையேற்ற விளையாட்டுகளுக்கான பன்னாட்டு நிர்வாகக் குழுவான ஃபெடரேஷன் ஈக்யுவஸ்டர் இன்டர்நேஷனல் வெற்றியாளரான ஆஸ்திரியாவைச் சேர்ந்த இசபெல் ஹஸ்லேடர் ஃபுட்னானி, சி.இ.சி. குதிரையேற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளித்து வந்தார். 

1 டிரஸ்ஸேஜ் அணிப் பிரிவில் தங்கம்; கெவின் கேப்ரியல் (10 வயது), குழந்தைகள் 2 டிரஸ்ஸேஜ் - தனிநபர், அணிப் பிரிவில் 2 தங்கம், அனன்யா ஹரிதாஸ் (12 வயது) குழந்தைகள் 2 டிரஸ்ஸேஜ் தனிநபர் பிரிவில் வெள்ளி, குழந்தைகள் 2 டிரஸ்ஸேஜ் அணிப் பிரிவில் ஒரு தங்கம் ஆகியவற்றை வென்றனர். குழந்தைகள் 2, ஜூனியர் பிரிவுகளில் முறையே கெவின் கேப்ரியல், சமன்னா எவேரா ஒட்டுமொத்த சாம்பியன் ரைடர்ஸ் டிராபியையும் வென்றனர்.

No comments:

Post a Comment