திராவிடர் கழகத்தின் எதிர்காலம் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

திராவிடர் கழகத்தின் எதிர்காலம் என்ன?

- கி.வீரமணி பதில்

தந்தை பெரியார் அவர்களுடைய திராவிடர் கழகத்தின் எதிர்காலம் என்ன?

பலருடைய உள்ளத்தில் எழுந்த இந்தக் கேள்விக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளரான கி.வீரமணி பதில் அளித்துள்ளார்.

தந்தை பெரியாரின் மறைவால் தன்வசமிழந்து கிடக்கிற நிலையில் கி.வீரமணியை நிருபர்கள் பேட்டி கண்டனர்.

“பெரியார் மறைவினால் திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்துவிடும் என்று கூறப்படுகிறதே” என்று சில நிருபர்கள் வீரமணியிடம் கேட்டனர்.

இந்த வேதனையான சூழ்நிலையிலும் அரசியல் சிந்தனைதானா? என்று வீரமணி மிகவும் நொந்து கொண்டார்.

ஆனாலும், இது மிக முக்கியமான கேள்வி; எல்லோருடைய மனதிலும் இடம் பெற்றுள்ள கேள்வி என்பதால் இதற்கு பதில் சொல்கிறேன் என்று வீரமணி சொன்னார்.

அவர் தெரிவித்ததாவது: “பெரியார் அவர்களின் திராவிடர் கழகம் தனித்தன்மை வாய்ந்தது.

அது தனி அமைப்பு - திட்டவட்டமான கொள்கைகளை உடையது. அதனை யாராலும் அசைக்க முடியாது. திராவிடர் கழகம் என்றும் நீடித்து பணி புரியும்.” இவ்வாறு வீரமணி கூறினார்.

(‘தென்னகம் இதழ்’ - 25.12.1973, பக்கம் 1 )

No comments:

Post a Comment